Jul 26, 2026
Thisaigal NewsYouTube
"அந்த அகந்தையுடனேயே தொடருங்கள்" - ஓன் ஹாஃபிஸ் கூறிய கருத்திற்கு அந்தோணி லோக் பதிலடி
அரசியல்

"அந்த அகந்தையுடனேயே தொடருங்கள்" - ஓன் ஹாஃபிஸ் கூறிய கருத்திற்கு அந்தோணி லோக் பதிலடி

Share:

கோலாலம்பூர், ஜூன்.07-

ஜசெக கட்சியுடன் ஒரே மேசையில் அமர்வதை விட மந்திரி பெசார் பதவியைத் துறப்பேன் என்று ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் ஃகாஸி கூறிய கருத்துக்கு ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து தமது முகநூல் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், ஜசெக உடன் ஒரே மேசையில் அமர விரும்பவில்லையா? அந்த அகந்தையுடனே தொடருங்கள் என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

மேலும், பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி ஒவ்வொரு வாரமும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஜசெக தலைவர்களுடன் ஒரே மேசையில் அமர்வதையும் சுட்டிக் காட்டியுள்ள அந்தோணி லோக், ஸாஹிட் ஹாமிடியுடன் தாம் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

ஓன் ஹாஃபிஸ் மற்றும் அந்தோணி லோக் இடையிலான இந்த விவாதம், ஜோகூர் அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

சர்ச்சைக்குரிய தொழிலதிபர் Nicky Liow பிகேஆர் உறுப்பினர் அல்ல – ஃபுஸியா சாலே விளக்கம்

சர்ச்சைக்குரிய தொழிலதிபர் Nicky Liow பிகேஆர் உறுப்பினர் அல்ல – ஃபுஸியா சாலே விளக்கம்

தேர்தலுக்கு முன்பே பாரிசான் பெரிக்காத்தான் கூட்டணியில் விரிசல் – அமிருடின் ஷாரி விமர்சனம்

தேர்தலுக்கு முன்பே பாரிசான் பெரிக்காத்தான் கூட்டணியில் விரிசல் – அமிருடின் ஷாரி விமர்சனம்

சனுசியின் பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது -பெரிக்காத்தான் தகவல் பிரிவுத் தலைவர்

சனுசியின் பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது -பெரிக்காத்தான் தகவல் பிரிவுத் தலைவர்

நெகிரி செம்பிலான் அமைதியான மாநிலம்:  அரசியல் லாபத்திற்காக அதன் ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டாம் - ஃபாஹ்மி ஃபாட்சீல் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் அமைதியான மாநிலம்: அரசியல் லாபத்திற்காக அதன் ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டாம் - ஃபாஹ்மி ஃபாட்சீல் வலியுறுத்து

பெரிக்காத்தானை விட்டு பெர்சாத்து அல்ல, பாஸ் கட்சியே வெளியேற வேண்டும் - முஹிடின் யாசின் கருத்து

பெரிக்காத்தானை விட்டு பெர்சாத்து அல்ல, பாஸ் கட்சியே வெளியேற வேண்டும் - முஹிடின் யாசின் கருத்து

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: நாளை நேரில் செல்கிறார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: நாளை நேரில் செல்கிறார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்