Mar 6, 2026
Thisaigal NewsYouTube
அது பொதுவான உத்தரவாகும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் விளக்கம்
அரசியல்

அது பொதுவான உத்தரவாகும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் விளக்கம்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 15-

நாட்டில் லஞ்ச ஊழலை துடைத்தொழிப்பதில் முழு வீச்சில் பங்காற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM-மிற்கு பொதுவான ஓர் உத்தரவை தாம் பிறப்பித்ததாகவும், குறிப்பிட்ட நபர்கள் அல்லது வழக்குகளில் முனைப்புக்காட்டும்படி எந்தவொரு உத்தரவையும் SPRM மிற்கு தாம் பிறப்பிக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மக்களவையில் விளக்கம் அளித்தார்.

Bloomberg அனைத்துலக ஊடகத்திற்கு தாம் அளித்த பேட்டியின் போது இதனைதான் தாம் வலியுறுத்தியதாகவும், குறிப்பிட்ட வழக்குகளில் முனைப்பும்காட்டும்படி தாம் கூறியது இல்லை என்று பெரிக்காத்தான் நேஷனல் பாசிர் மாஸ் எம்.பி. அஹ்மத் ஃபதில் ஷாரி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் பிரதமர் மேற்கண்ட விளக்கத்தை அளித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து SPRM தன்னிலை விளக்கம் அளித்து இருப்பதையும் டத்தோஸ்ரீ அன்வார் சுட்டிக்காட்டினார். குறிப்பிட்ட வழக்குகளை கையாளும்படி எந்த சமயத்திலும் பிரதமரிடமிருந்து தாங்கள் உத்தரவு பெறவில்லை என்று அந்த ஆணையம் தெளிவுப்படுத்தியிருப்பதையும் டத்தோஸ்ரீ அன்வார் சுட்டிக்காட்டினார்.

SPRM- மிற்கு அப்பாற்பட்டு, வருமான வரி வாரியம், போலீஸ் துறை மற்றும் அமலாக்க ஏஜென்சிகளிடம் தாம் இத்தகைய உத்தரவுகளை பிறப்பித்தது கிடையாது ன்பதையும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.

Related News

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை