Dec 21, 2025
Thisaigal NewsYouTube
அது பொதுவான உத்தரவாகும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் விளக்கம்
அரசியல்

அது பொதுவான உத்தரவாகும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் விளக்கம்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 15-

நாட்டில் லஞ்ச ஊழலை துடைத்தொழிப்பதில் முழு வீச்சில் பங்காற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM-மிற்கு பொதுவான ஓர் உத்தரவை தாம் பிறப்பித்ததாகவும், குறிப்பிட்ட நபர்கள் அல்லது வழக்குகளில் முனைப்புக்காட்டும்படி எந்தவொரு உத்தரவையும் SPRM மிற்கு தாம் பிறப்பிக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மக்களவையில் விளக்கம் அளித்தார்.

Bloomberg அனைத்துலக ஊடகத்திற்கு தாம் அளித்த பேட்டியின் போது இதனைதான் தாம் வலியுறுத்தியதாகவும், குறிப்பிட்ட வழக்குகளில் முனைப்பும்காட்டும்படி தாம் கூறியது இல்லை என்று பெரிக்காத்தான் நேஷனல் பாசிர் மாஸ் எம்.பி. அஹ்மத் ஃபதில் ஷாரி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் பிரதமர் மேற்கண்ட விளக்கத்தை அளித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து SPRM தன்னிலை விளக்கம் அளித்து இருப்பதையும் டத்தோஸ்ரீ அன்வார் சுட்டிக்காட்டினார். குறிப்பிட்ட வழக்குகளை கையாளும்படி எந்த சமயத்திலும் பிரதமரிடமிருந்து தாங்கள் உத்தரவு பெறவில்லை என்று அந்த ஆணையம் தெளிவுப்படுத்தியிருப்பதையும் டத்தோஸ்ரீ அன்வார் சுட்டிக்காட்டினார்.

SPRM- மிற்கு அப்பாற்பட்டு, வருமான வரி வாரியம், போலீஸ் துறை மற்றும் அமலாக்க ஏஜென்சிகளிடம் தாம் இத்தகைய உத்தரவுகளை பிறப்பித்தது கிடையாது ன்பதையும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.

Related News

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ