Oct 26, 2025
Thisaigal NewsYouTube
தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்
அரசியல்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.25-

வரும் பொதுத் தேர்தலில் தொகுதிகளில் மும்முனைப் போட்டி ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு பெரிக்காத்தான் நேஷனலுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுவது தொடர்பில் மலேசிய சோஷலிச கட்சியான பிஎஸ்எம், தனது உயர்மட்டத் தலைவர்களுடன் விவாதிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் தெரிவித்துள்ளார்.

விரைவில் நடைபெறவிருக்கும் பிஎஸ்எம் கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்தில் இந்த உத்தேசப் பரிந்துரை குறித்து மிக ஆழமாக விவாதிக்கப்படும் என்று மைக்கல் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி என்ற முறையில் பிஎஸ்எம், மற்ற எதிர்க்கட்சிகளுடன் ஒரே தொகுதியில் போட்டியிடுவதைத் தவிர்க்க விரும்புகிறது.

எனினும் பிஎஸ்எம், இன மற்றும் மத அடிப்படையிலான அரசியலுக்கு முரண்பட்டது என்பதில் கட்சி உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டு இருப்பதாக அவர் விளக்கினார்.

Related News

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

மலேசியா-அமெரிக்க வரி மீதான உடன்பாடு: இறுதி கட்டப் பேச்சு வார்த்தையில் உள்ளது

மலேசியா-அமெரிக்க வரி மீதான உடன்பாடு: இறுதி கட்டப் பேச்சு வார்த்தையில் உள்ளது

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்

அமெரிக்க அதிபரின் வருகையை எதிர்த்து 700 பேர் ஆட்சேப மறியல்

அமெரிக்க அதிபரின் வருகையை எதிர்த்து 700 பேர் ஆட்சேப மறியல்