Mar 4, 2026
Thisaigal NewsYouTube
மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய ஓர் அரசாங்கத்தை விரும்புகின்றனர் சபா மக்கள்
அரசியல்

மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய ஓர் அரசாங்கத்தை விரும்புகின்றனர் சபா மக்கள்

Share:

கோத்தா கினபாலு, நவம்பர்.20-

வரும் 29 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சபா சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கக்கூடிய ஆளுமை நிறைந்த ஒரு தலைமைத்துவத்தை மாநில வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சபா தேர்தல் முடிவுகள், மக்களுக்கு முழுமையான மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பது சபா மக்களின் மிகுந்த நம்பிக்கையாகும்.

முன்னேற்றத்தையும், சமூகவியல் நல்வாழ்வையும் அனுபவிக்க வேண்டும் என்பது சபா மக்களின் விருப்பமாக உள்ளது. குறிப்பாக நல்வாழ்வு, பாதுகாப்பு மற்றும் வாழ்க்கையின் நிலைத்தன்மை, உள்கட்டமைப்பு அடிப்படையில் அந்த முன்னேற்றம் இருக்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாகும்.

இப்போது இருப்பதை விட மிகச் சிறந்த மாற்றங்களைச் செயல்படுத்தக்கூடிய ஓர் அரசாங்கத்தை தாங்கள் எதிர்பார்ப்பதாக இளைய தலைமுறையான மாணவி எமிலியா சிடின் கூறினார்.

உண்மையிலே தங்களுக்கு எத்தகைய முன்னேற்றம் வேண்டும் என்பதை சபா மக்களில் சிலர், இன்னும் முழுமையாக உணரவில்லை. இதன் காரணமாகவே சபாவில் உள்கட்டமைப்பு வசதிகள் மிக மோசமான நிலையில் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த சனிக்கிழமை சபாவிற்கு வருகை புரிந்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், சபா மக்களுக்கு உதவுவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

அவரின் உத்தரவாதத்தை கூட உணர முடியாத நிலையில் சபா மக்கள் சிலர் இருந்தாலும், சிறந்த தலைமைத்துவம் வேண்டும் என்பதில் ஒட்டுமொத்த மக்கள் உறுதியாக இருப்பதாக மாணவி எமிலியா சிடின் தெரிவித்தார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

 பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா  ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்