Mar 13, 2026
Thisaigal NewsYouTube
முகைதீன் தலைமையில் பெரிக்காத்தான் தலைமைத்துவ மன்றமா? - பிஎன் வட்டாரத்தில் நிலவும் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள்
அரசியல்

முகைதீன் தலைமையில் பெரிக்காத்தான் தலைமைத்துவ மன்றமா? - பிஎன் வட்டாரத்தில் நிலவும் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.27-

டான் ஶ்ரீ முகைதீன் யாசின் தலைமையில் பெரிகாத்தான் நேஷனல் தலைமைத்துவ மன்றத்தை உருவாக்கும் ஒரு முன்மொழிவு பரிசீலனையில் உள்ளதை பாஸ் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

என்றாலும் இம்முடிவானது, எதிர்வரும் பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில், கூட்டணிக் கட்சித் தலைவர்களால் கூட்டாக எடுக்கப்பட வேண்டிய ஒன்று என பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.

முகைதீன் யாசின் தலைமையிலான தலைமைத்துவ மன்றம் அமைப்பது குறித்த முன்மொழிவு ஒன்று பரிசீலனையில் இருப்பதை ஒப்புக் கொண்ட தக்கியுடின், பாஸ் அத்தகைய ஏற்பாட்டை ஏற்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

என்றாலும், இந்த விவகாரத்தில் எந்தவொரு தனிப்பட்ட கட்சியின் தலையீடும் இன்றி, தலைமைத்துவ மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் புதிய தலைவரை நியமிப்பதற்காக இந்த வாரம் நடைபெற்ற உச்சமன்றக் கூட்டத்திற்கு டான் ஶ்ரீ முகைதீன் யாசின் அழைக்கப்படவில்லை என்பதால், அவர் உச்சமன்றத்தின் உறுப்பினராகவும் இல்லை என்றும் முந்தைய தகவல்கள் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பொதுத் தேர்தல் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தியை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

பொதுத் தேர்தல் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தியை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

சிலாங்கூர் சட்டமன்றத்தில் சென்னை மாணவர்கள் / சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதனுடன் கலந்துரையாடல் நடத்தினர்

சிலாங்கூர் சட்டமன்றத்தில் சென்னை மாணவர்கள் / சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதனுடன் கலந்துரையாடல் நடத்தினர்

மத நிந்தனை விவகாரங்கள்: அரசும் காவற்படையும் உடனடி நடவடிக்கை எடுக்கக் துளசி மனோகரன் கோரிக்கை

மத நிந்தனை விவகாரங்கள்: அரசும் காவற்படையும் உடனடி நடவடிக்கை எடுக்கக் துளசி மனோகரன் கோரிக்கை

அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டம் அடுத்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவை முடிவு செய்யும் – அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தகவல்

அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டம் அடுத்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவை முடிவு செய்யும் – அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தகவல்

பேரா மாநில ஜக்காத் : 5.6 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றுக்கொண்டார் சுல்தான் நஸ்ரீன் ஷா

பேரா மாநில ஜக்காத் : 5.6 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றுக்கொண்டார் சுல்தான் நஸ்ரீன் ஷா

மேற்காசியப் போர் பதற்றம்: விலையேற்றத்தைத் தடுக்க மலேசிய அரசு தீவிர கண்காணிப்பு

மேற்காசியப் போர் பதற்றம்: விலையேற்றத்தைத் தடுக்க மலேசிய அரசு தீவிர கண்காணிப்பு