May 6, 2026
Thisaigal NewsYouTube
முகைதீன் தலைமையில் பெரிக்காத்தான் தலைமைத்துவ மன்றமா? - பிஎன் வட்டாரத்தில் நிலவும் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள்
அரசியல்

முகைதீன் தலைமையில் பெரிக்காத்தான் தலைமைத்துவ மன்றமா? - பிஎன் வட்டாரத்தில் நிலவும் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.27-

டான் ஶ்ரீ முகைதீன் யாசின் தலைமையில் பெரிகாத்தான் நேஷனல் தலைமைத்துவ மன்றத்தை உருவாக்கும் ஒரு முன்மொழிவு பரிசீலனையில் உள்ளதை பாஸ் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

என்றாலும் இம்முடிவானது, எதிர்வரும் பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில், கூட்டணிக் கட்சித் தலைவர்களால் கூட்டாக எடுக்கப்பட வேண்டிய ஒன்று என பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.

முகைதீன் யாசின் தலைமையிலான தலைமைத்துவ மன்றம் அமைப்பது குறித்த முன்மொழிவு ஒன்று பரிசீலனையில் இருப்பதை ஒப்புக் கொண்ட தக்கியுடின், பாஸ் அத்தகைய ஏற்பாட்டை ஏற்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

என்றாலும், இந்த விவகாரத்தில் எந்தவொரு தனிப்பட்ட கட்சியின் தலையீடும் இன்றி, தலைமைத்துவ மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் புதிய தலைவரை நியமிப்பதற்காக இந்த வாரம் நடைபெற்ற உச்சமன்றக் கூட்டத்திற்கு டான் ஶ்ரீ முகைதீன் யாசின் அழைக்கப்படவில்லை என்பதால், அவர் உச்சமன்றத்தின் உறுப்பினராகவும் இல்லை என்றும் முந்தைய தகவல்கள் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோ, பக்காத்தான் ஒப்புதல்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோ, பக்காத்தான் ஒப்புதல்

நாளை பக்காத்தானின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - சிரம்பானில் சாலைகள் தற்காலிக மூடல்

நாளை பக்காத்தானின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - சிரம்பானில் சாலைகள் தற்காலிக மூடல்

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி