Mar 5, 2026
Thisaigal NewsYouTube
14 எம்.பி.க்கள் தங்கள் ஆதரவை மீட்டுக் கொண்டார்களா?
அரசியல்

14 எம்.பி.க்கள் தங்கள் ஆதரவை மீட்டுக் கொண்டார்களா?

Share:

ஜெலெபு, மார்ச்.15-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு தாங்கள் வழங்கி வந்த ஆதரவை அம்னோவைச் சேர்ந்த 14 எம்.பி.க்கள் மீட்டுக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் தகவலை ஜெலெபு எம்.பி. ஜலாலுடின் அலியாஸ் வன்மையாக மறுத்தார்.

அப்படி எதுவும் நடக்கவில்லை, அந்த தகவலில் உண்மையில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில தினங்களாக இத்தகைய தகவல், சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், அதில் உண்மையில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

அம்னோவைச் சேர்ந்த எம்.பி.க்கள், தங்கள் ஆதரவை மீட்டுக் கொண்டால் அல்லது வேறு கட்சியில் சேர்ந்தால் 100 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையைக் கட்சிக்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே பொதுத் தேர்தலில் அவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு