May 5, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கைக் கோரும் மந்திரி புசாரின் முயற்சிக்கு கெடா மக்கள் ஆதரவு: லங்காவி எம்.பி கருத்து
அரசியல்

பினாங்கைக் கோரும் மந்திரி புசாரின் முயற்சிக்கு கெடா மக்கள் ஆதரவு: லங்காவி எம்.பி கருத்து

Share:

கோலாலம்பூர், ஜனவரி.28-

பினாங்கு மாநிலம் வரலாற்று ரீதியாக கெடா மாநிலத்திற்குச் சொந்தமானது என்றும், அதனை மீண்டும் கோருவதற்கு கெடா மந்திரி புசார் முகமட் சனுசி முகமட் நோர் எடுத்து வரும் முயற்சிகளுக்கு கெடா மக்கள் முழு ஆதரவை வழங்குகிறார்கள் என்றும் லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சுஹைமி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயாவ், இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் என்று கூறியிருப்பதைச் சுட்டிக் காட்டிய சுஹைமி, "நாங்களும் நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராகவே இருக்கிறோம்" என்று சவால் விடுத்துள்ளார்.

1786-ஆம் ஆண்டில் பிரான்சிஸ் லைட் என்பவரால் பினாங்கு சட்டவிரோதமாகக் கைப்பற்றப்பட்டது என்றும், அது காலங்காலமாக கெடா சுல்தானுக்குச் சொந்தமான நிலம் என்றும் கெடா தரப்பு வாதிடுகிறது. இதற்காக ஒரு வரலாற்று ஆய்வுத் குழுவை அமைத்து, 20,000-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி புசார் சனூசி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

எனினும் இவ்விவகாரத்தில் மந்திரி பெசார் சனூசி எடுக்கக்கூடிய எந்தவொரு முயற்சிக்கும் கெடா மக்கள் ஆதரவாக இருப்பார்கள் என்று டத்தோ சுஹைமி அப்துல்லா தெரிவித்தார்.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோ, பக்காத்தான் ஒப்புதல்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோ, பக்காத்தான் ஒப்புதல்

நாளை பக்காத்தானின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - சிரம்பானில் சாலைகள் தற்காலிக மூடல்

நாளை பக்காத்தானின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - சிரம்பானில் சாலைகள் தற்காலிக மூடல்

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி