Feb 9, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கைக் கோரும் மந்திரி புசாரின் முயற்சிக்கு கெடா மக்கள் ஆதரவு: லங்காவி எம்.பி கருத்து
அரசியல்

பினாங்கைக் கோரும் மந்திரி புசாரின் முயற்சிக்கு கெடா மக்கள் ஆதரவு: லங்காவி எம்.பி கருத்து

Share:

கோலாலம்பூர், ஜனவரி.28-

பினாங்கு மாநிலம் வரலாற்று ரீதியாக கெடா மாநிலத்திற்குச் சொந்தமானது என்றும், அதனை மீண்டும் கோருவதற்கு கெடா மந்திரி புசார் முகமட் சனுசி முகமட் நோர் எடுத்து வரும் முயற்சிகளுக்கு கெடா மக்கள் முழு ஆதரவை வழங்குகிறார்கள் என்றும் லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சுஹைமி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயாவ், இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் என்று கூறியிருப்பதைச் சுட்டிக் காட்டிய சுஹைமி, "நாங்களும் நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராகவே இருக்கிறோம்" என்று சவால் விடுத்துள்ளார்.

1786-ஆம் ஆண்டில் பிரான்சிஸ் லைட் என்பவரால் பினாங்கு சட்டவிரோதமாகக் கைப்பற்றப்பட்டது என்றும், அது காலங்காலமாக கெடா சுல்தானுக்குச் சொந்தமான நிலம் என்றும் கெடா தரப்பு வாதிடுகிறது. இதற்காக ஒரு வரலாற்று ஆய்வுத் குழுவை அமைத்து, 20,000-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி புசார் சனூசி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

எனினும் இவ்விவகாரத்தில் மந்திரி பெசார் சனூசி எடுக்கக்கூடிய எந்தவொரு முயற்சிக்கும் கெடா மக்கள் ஆதரவாக இருப்பார்கள் என்று டத்தோ சுஹைமி அப்துல்லா தெரிவித்தார்.

Related News

மலேசியா - இந்தியா உறவில் புதிய மைல்கல்: உள்ளூர் நாணய வர்த்தகமும் தூதரக விரிவாக்கமும்

மலேசியா - இந்தியா உறவில் புதிய மைல்கல்: உள்ளூர் நாணய வர்த்தகமும் தூதரக விரிவாக்கமும்

மலேசியா - இந்தியா இடையே 11 முக்கிய ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

மலேசியா - இந்தியா இடையே 11 முக்கிய ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் மலேசியாவும் இந்தியாவும் விவேகமான குரல்களாக ஒலிக்க முடியும் - பிரதமர் அன்வார்

புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் மலேசியாவும் இந்தியாவும் விவேகமான குரல்களாக ஒலிக்க முடியும் - பிரதமர் அன்வார்

இந்தியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன் பல்லின மலேசியாவை பிகேஆர் ஆதரிக்கும் - பிரதமர் அன்வார்

இந்தியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன் பல்லின மலேசியாவை பிகேஆர் ஆதரிக்கும் - பிரதமர் அன்வார்

பெரிக்காத்தான் கூட்டணிக்கு பாஸ் தலைமை வகிக்க முகைதீன் யாசின் நிபந்தனையின்றி ஒப்புக் கொண்டார்: பாஸ் துணைத்தலைவர் துவான் இப்ராஹிம் அறிவிப்பு

பெரிக்காத்தான் கூட்டணிக்கு பாஸ் தலைமை வகிக்க முகைதீன் யாசின் நிபந்தனையின்றி ஒப்புக் கொண்டார்: பாஸ் துணைத்தலைவர் துவான் இப்ராஹிம் அறிவிப்பு

பெரிக்காத்தானுக்கு தலைமை வகிக்க பாஸ் கட்சியின் மூத்த தலைவரை மனதில் வைத்துள்ளோம்: தக்கியுடின்

பெரிக்காத்தானுக்கு தலைமை வகிக்க பாஸ் கட்சியின் மூத்த தலைவரை மனதில் வைத்துள்ளோம்: தக்கியுடின்