கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு வணிகத் தளங்களுக்கான வாடகையை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 50 விழுக்காடு குறைப்பதாக அறிவித்துள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடியாலும் வாழ்க்கைச் செலவின உயர்வாலும் பாதிக்கப்பட்டுள்ள சிறு வணிகர்களுக்கு உதவும் வகையில், இந்தச் சலுகை 2027 டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும் என கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார். எனினும், இந்தக் குறைக்கப்பட்ட வாடகைத் தொகை மாதத்திற்கு 50 ரிங்கிட்டிற்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்றும், இந்தச் சலுகையைப் பெற விரும்பும் வணிகர்கள் தங்களின் பழைய வாடகை நிலுவைகளை முழுமையாகச் செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்


