கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு வணிகத் தளங்களுக்கான வாடகையை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 50 விழுக்காடு குறைப்பதாக அறிவித்துள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடியாலும் வாழ்க்கைச் செலவின உயர்வாலும் பாதிக்கப்பட்டுள்ள சிறு வணிகர்களுக்கு உதவும் வகையில், இந்தச் சலுகை 2027 டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும் என கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார். எனினும், இந்தக் குறைக்கப்பட்ட வாடகைத் தொகை மாதத்திற்கு 50 ரிங்கிட்டிற்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்றும், இந்தச் சலுகையைப் பெற விரும்பும் வணிகர்கள் தங்களின் பழைய வாடகை நிலுவைகளை முழுமையாகச் செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


