டிஏபி பொதுச் செயலாளரும், போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக், நெகிரி செம்பிலான், ஜெலுபு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சென்னா சட்டமன்றத் தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றார். சென்னா தொகுதியை கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து தற்காத்து வரும் அந்தோணி லோக் 2,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் ரோஸ்மாடி ஆரிஃப்- பிடம் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியிருந்த அந்தோணி லோக்கிற்கு 5,302 வாக்குகளும், ரோஸ்மாடி ஆரிஃப் பிற்கு 3,190 வாக்குகளும் கிடைத்தன. சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினரான அந்தோணி லோக், இந்த வெற்றியின் மூலம் அவர் சென்னா தொகுதியை மூன்றாவது முறையாக தற்காத்துக்கொண்டார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


