டிஏபி பொதுச் செயலாளரும், போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக், நெகிரி செம்பிலான், ஜெலுபு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சென்னா சட்டமன்றத் தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றார். சென்னா தொகுதியை கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து தற்காத்து வரும் அந்தோணி லோக் 2,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் ரோஸ்மாடி ஆரிஃப்- பிடம் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியிருந்த அந்தோணி லோக்கிற்கு 5,302 வாக்குகளும், ரோஸ்மாடி ஆரிஃப் பிற்கு 3,190 வாக்குகளும் கிடைத்தன. சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினரான அந்தோணி லோக், இந்த வெற்றியின் மூலம் அவர் சென்னா தொகுதியை மூன்றாவது முறையாக தற்காத்துக்கொண்டார்.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு


