டிஏபி பொதுச் செயலாளரும், போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக், நெகிரி செம்பிலான், ஜெலுபு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சென்னா சட்டமன்றத் தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றார். சென்னா தொகுதியை கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து தற்காத்து வரும் அந்தோணி லோக் 2,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் ரோஸ்மாடி ஆரிஃப்- பிடம் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியிருந்த அந்தோணி லோக்கிற்கு 5,302 வாக்குகளும், ரோஸ்மாடி ஆரிஃப் பிற்கு 3,190 வாக்குகளும் கிடைத்தன. சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினரான அந்தோணி லோக், இந்த வெற்றியின் மூலம் அவர் சென்னா தொகுதியை மூன்றாவது முறையாக தற்காத்துக்கொண்டார்.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்


