Dec 21, 2025
Thisaigal NewsYouTube
என் மகன் 20 லட்சம் வெள்ளியை கடத்தினாரா? லிம் குவான் எங் சாட்சியம்
அரசியல்

என் மகன் 20 லட்சம் வெள்ளியை கடத்தினாரா? லிம் குவான் எங் சாட்சியம்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 13-

தனது மகன் 20 லட்சம் வெள்ளியை சிங்கப்பூருக்கு கடத்திச் சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யானதாகும் என்று டிஏபி தலைவர் லிம் குவான் எங் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த தகவலில் உண்மையில்லை என்பதை அன்றைய போலீஸ் படைத் தலைவர் அஹ்மத் ஹமீத் படோர் உறுதிப்படுத்தியதாகவும் முன்னாள் நிதி அமைச்சருமான லிம் குவான் எங் குறிப்பிட்டார்.

இவ்விவகாம் குறித்து சீனப்பத்திரிகை ஒன்றும் செய்தி வெளியிட்டு இருந்தது. ஆனால், சம்பந்தப்பட்ட செய்தியில் தமது பெயரை அது குறிப்பிடவில்லை. இருந்த போதிலும் இப்படியொரு தவறான செய்தியை வெளியிட்டதற்காக அந்தப் பத்திரிகை மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

அத்துடன் அந்த செய்தியை மீட்டுக்கொள்வதாகவும் பகிரங்கமாக அறிவித்தது என்று லிம் குவான் எங் தெரிவித்தார்.

பிரபல வலைப்பதிவாளர் வான் அஸ்ரி வான் டெரிஸ் என்பவருக்கு எதிராக தாம் தொடுத்துள்ள 30 லட்சம் வெள்ளி மானநஷ்ட வழக்கில் உயர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கையில் பாகன் நாடாளுமன்ற உறுப்பினரான லிம் குவான் எங் மேற்கண்டவாறு சாட்சிம் அளித்தார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்