ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் 3ஆர் விவகாரத்தை எழுப்பக்கூடாது என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைப்புடீன் நசுதியோன் நினைவுறுத்தியுள்ளார். சமயம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் தொடர்புடைய விவகாரத்தை அரசியல் கட்சிகள் தூண்டிவிடுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த 3ஆர் விவகாரத்தை எந்தவொரு அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும் எழுப்பும் நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நிந்தனை சட்டம் பாயும் என்று சைப்புடீன் எச்சரித்துள்ளார். அரசியல்வாதிகளின் உரைகள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வரும் வேளையில் நடப்பு விதிமுறைகள் மீறப்படுமானால் அரச மலேசிய போலீஸ் படை உரிய நடவடிக்கையை எடுக்கும் என்று அவர் நினைவுறுத்தினார்.ரிலிஜன்,ரோயல்டி,ரேஸ் ஆகியவையே அந்த 3ஆர் என்று சைப்புடீன் விளக்கம் அளித்துள்ளார்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


