Jan 20, 2026
Thisaigal NewsYouTube
அரசியல் கட்சிகள் 3ஆர் விவகாரத்தை தொடக்கூடாது
அரசியல்

அரசியல் கட்சிகள் 3ஆர் விவகாரத்தை தொடக்கூடாது

Share:

ஆறு மாநில​ங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் 3ஆர் விவகாரத்தை எழுப்பக்கூடாது என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைப்புடீன் நசுதியோன் நினைவுறுத்தியுள்ளார். சமயம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் தொட​ர்புடைய விவகாரத்தை அரசியல் கட்சிகள் ​தூண்டிவிடுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த 3ஆர் விவகாரத்தை எந்தவொரு அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும் எழுப்பும் நி​லை ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நிந்தனை சட்டம் பாயும் என்று சைப்புடீன் எச்சரித்துள்ளார். அரசியல்வாதிகளின் உரைகள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வரும் வேளையில் நடப்பு விதிமுறைகள் ​மீறப்படுமானால் அரச மலேசிய போ​லீஸ் படை உரிய நடவடிக்கையை எடுக்கும் என்று அவர் நினைவுறுத்தினார்.ரிலிஜன்,ரோயல்டி,ரேஸ் ஆகியவையே அந்த 3ஆர் என்று சைப்புடீன் விளக்கம் அளித்துள்ளார்.

Related News