ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் 3ஆர் விவகாரத்தை எழுப்பக்கூடாது என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைப்புடீன் நசுதியோன் நினைவுறுத்தியுள்ளார். சமயம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் தொடர்புடைய விவகாரத்தை அரசியல் கட்சிகள் தூண்டிவிடுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த 3ஆர் விவகாரத்தை எந்தவொரு அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும் எழுப்பும் நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நிந்தனை சட்டம் பாயும் என்று சைப்புடீன் எச்சரித்துள்ளார். அரசியல்வாதிகளின் உரைகள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வரும் வேளையில் நடப்பு விதிமுறைகள் மீறப்படுமானால் அரச மலேசிய போலீஸ் படை உரிய நடவடிக்கையை எடுக்கும் என்று அவர் நினைவுறுத்தினார்.ரிலிஜன்,ரோயல்டி,ரேஸ் ஆகியவையே அந்த 3ஆர் என்று சைப்புடீன் விளக்கம் அளித்துள்ளார்.

Related News

பாலோங் மற்றும் செம்போங் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரப் பொருட்கள் சேதம்

நெகிரி செம்பிலான் தேர்தல்: ஓராங் அஸ்லி வேட்பாளராக வரலாறு படைக்கும் இலக்குடன் களமிறங்கும் டயானா டால்

நெகிரி செம்பிலான் தேர்தல்: குறைந்தது 23 தொகுதிகளில் வெற்றி பெற பக்காத்தான் இலக்கு – அந்தோணி லோக்

"பிரதமர் உத்தரவிட்டால் அமைச்சரவையில் இருந்து விலகத் தயார்" – முகமட் ஹசன்

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: மக்கள் நலனை முன்னிறுத்தும் பக்காத்தான் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு


