Dec 22, 2025
Thisaigal NewsYouTube
அனைத்துலக போட்டியாற்றல் தர வரிசையில் சரிவு; மலேசியாவின் பொருளாதாரம் சரியான தடத்தில் இல்லை என MUHYIDDIN கூறுகிறார்.
அரசியல்

அனைத்துலக போட்டியாற்றல் தர வரிசையில் சரிவு; மலேசியாவின் பொருளாதாரம் சரியான தடத்தில் இல்லை என MUHYIDDIN கூறுகிறார்.

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 20-

அனைத்துலக போட்டியாற்றல் தர வரிசையில், மலேசியா 34ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது, நாட்டின் பொருளாதாரம் சரியாத தடத்தில் இல்லாததை பிரதிபலிப்பதாக, பெரிக்காதான் நசியனால் தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் சாடியுள்ளார்.

நிர்வாக மேம்பாட்டுக்கான அனைத்துலக கழகம் - IMD வெளியிட்டுள்ள அந்த தரவில், சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.

உள்கட்டமைப்பை தவிர, அளவிடப்பட்ட இதர அனைத்து துறைகளிலும், மலேசியா பின் தங்கியுள்ளது, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்-மின் தலைமைத்துவத்திற்கு பேரிடியாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அது தவிர, சுவிட்சர்லாந்து-ந்தை தளமாக கொண்ட வர்த்தக பள்ளி ஒன்று வெளியிட்டுள்ள தரவின் படி, 14 நாடுகளை உட்படுத்திய ஆசிய பசிபிக் நாடுகளிலும், மலேசியா 4 இடங்கள் பின் தள்ளப்பட்டு 10ஆவது இடத்தில் உள்ளது.

தென்கிழக்கு ஆசியாவிலும் தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளைவிட மலேசியா பின் தங்கியுள்ளது.

நாட்டின் வரலாற்றில் அனைத்துலக போட்டியாற்றல் தர வரிசையில், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்திற்கு பின்னால் மலேசியா தள்ளப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

போட்டியாற்றலுடனும் வலுவான பொருளாதாரத்துடனும் ஆசியாவின் புலியாக பார்க்கப்பட்ட மலேசியாவுக்கு, அந்த தரவுகள் கசப்பான ஒன்றாகவே அமைந்துள்ளன.

இனியும், வெறும் வார்த்தைகளால் ஆட்சி புரிவதைவிட, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில், அன்வார் முனைப்பு காட்ட வேண்டுமென முகைதீன் அறிவுறுத்தினார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்