ஈப்போ, ஜூலை.16-
மலாக்கா மாநில அரசு நிர்வாகத்திலிருந்து ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென வெளியேறியிருப்பது, பேராக் ஒற்றுமை அரசாங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கிடையிலான உறவில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று பேராக் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ சாரணி முஹமட் தெரிவித்துள்ளார்.
பேரா மாநில அரசு நிர்வாகத்தில் உள்ள பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் பிரதிநிதிகள் தொடர்ந்து எப்போதும் போல இணைந்தும், சாதாரணமாகவும் பணியாற்ற முடியும் என்று அவர் உறுதியளித்தார்.
இன்று ஈப்போ, Taman Lapangan Terbang –கில் 'ஹாலமான் ஸ்ரீ செஜேத்ரா' (Halaman Seri Sejahtera) திட்டத்தைத் தொடக்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசுகையில் சாரணி முஹமட் இவ்விவகாரத்தைப் பகிர்ந்து கொண்டார்.








