ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சுபாங் ஜெயா, சீபீல்டு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் ஆயுதம் தாங்கிய கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 17 பேருக்கு எதிரான வழக்கில் அவர்களை விடுதலை செய்து இருக்கும் பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு, ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
அந்த 17 பேரும் எதிர்வாதம் புரிய அழைக்கப்படாமலேயே விடுவிடுக்கப்பட்டதை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு கடந்த வாரம் மேல்முறையீடு செய்து இருப்பது குறித்து தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் அஸ்லான் அப்துல் ரோனி தெரிவித்துள்ளார்.
17 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 17 பேரும் ஆயுதங்களுடன் ஆலயத்திற்குள் நுழைந்தனர் என்பதை ஆதராப்பூர்வமாக நிரூபிக்க பிராசிகியூஷன் தரப்பு தவறிவிட்டதாக கூறி, அனைவரையும் கடந்த ஜுன் 27 ஆம் தேதி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விடுதலை செய்தது.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


