ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சுபாங் ஜெயா, சீபீல்டு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் ஆயுதம் தாங்கிய கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 17 பேருக்கு எதிரான வழக்கில் அவர்களை விடுதலை செய்து இருக்கும் பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு, ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
அந்த 17 பேரும் எதிர்வாதம் புரிய அழைக்கப்படாமலேயே விடுவிடுக்கப்பட்டதை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு கடந்த வாரம் மேல்முறையீடு செய்து இருப்பது குறித்து தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் அஸ்லான் அப்துல் ரோனி தெரிவித்துள்ளார்.
17 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 17 பேரும் ஆயுதங்களுடன் ஆலயத்திற்குள் நுழைந்தனர் என்பதை ஆதராப்பூர்வமாக நிரூபிக்க பிராசிகியூஷன் தரப்பு தவறிவிட்டதாக கூறி, அனைவரையும் கடந்த ஜுன் 27 ஆம் தேதி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விடுதலை செய்தது.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


