ஜோகூர் பாரு, ஜூலை.05-
முன்னாள் அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் Puad Zarkashi, ஜோகூர் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் Puteri Wangsa வேட்பாளரான Maszlee Malik-க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
முன்னாள் கல்வி அமைச்சரான மஸ்லீ, சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கத் தகுதியானவர் என்றும், அவரைப் போன்ற அறிவுள்ளவர்கள் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும் என்றும் Puad தெரிவித்துள்ளார்.
இதனால் தாம் விமர்சனங்களை எதிர்கொள்ளப் போவது உறுதி என்றாலும் கூட, அன்வார் இப்ராகிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பானுக்காக பிரசாரம் செய்வது தனது உரிமை என்றும் Puad குறிப்பிட்டுள்ளார்.
Rengit தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஜோகூர் மாநில சட்டமன்ற முன்னாள் சபாநாயகருமான Puad Zarkashi, வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலில் Rengit தொகுதியில் போட்டியிடும் Amanah வேட்பாளர் Yazid Bakri-க்கும் முன்னதாக தனது ஆதரவைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








