பெட்டாலிங் ஜெயா, ஜூன் 12-
இவ்வாண்டு அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் கட்சி தேர்தலில், அம்னோ-வின் முன்னாள் தலைவர்கள் உள்பட பிரபலமான நபர்கள், போட்டியிடுவதற்கு வழிசெய்ய, பெர்சத்து கட்சியின் நிபந்தனைகளில் தளர்வுகள் வழங்கப்பட வேண்டும்.
அக்கட்சியைச் சேர்ந்த கெரிக் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபத்ஹுல் ஹுஸிர் அயோப் அந்த வலியுறுத்தலை முன்வைத்துள்ளார்.
பெர்சத்து-வின் நடப்பு நிபந்தனையின்படி, இரு தவணைகள் உச்சமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர் மட்டுமே, அக்கட்சியின் முதல் 5 உயரிய பதவிகளுக்கு போட்டியிட வகை செய்கின்றது.
அந்த நிபந்தனை, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்பதோடு, கட்சிக்கும் இழப்பை ஏற்படுத்துகின்றது.
குறிப்பாக, பிரபலமான தலைவர்கள் கட்சியை வழிநடத்தாததால், அம்னோ-வின் உறுப்பினர்களை கவர்ந்திழுக்க முடியவில்லை என ஃபத்ஹுல் ஹுஸிர் கூறினார்.








