கடந்த ஜோகூர் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி சந்தித்த தோல்விக்கு மலாய் வாக்காளர்களின் ஆதரவு சரிந்ததே முக்கிய காரணம் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக மலாய் சமூகத்தினர் மற்றும் இளம் வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதில் கூட்டணி பின்தங்கியதை ஒப்புக்கொண்டார். வரும் தேர்தல்களில் இந்தத் தவறுகளைக் களைந்து, வாக்காளர்களைக் கவரும் வகையில் புதிய அரசியல் உத்திகள் மற்றும் பிரச்சார முறைகள் கையாளப்படும் என்றும் அமிருடின் ஷாரி மேலும் கூறினார்.








