Mar 6, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சுமையை கருத்தில் கொள்வீர் : பிரதமர் கோரிக்கை
அரசியல்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சுமையை கருத்தில் கொள்வீர் : பிரதமர் கோரிக்கை

Share:

புத்ராஜெயா, டிச.5-


வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தையும், சிரமத்தையும், சுமையையும் கருத்தில் கொள்ளுமாறு ஜிஎல்சி எனப்படும் அரசாங்க சார்பு நிறுவனங்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக, வெள்ளத்தில் தங்கள் உடமைகளை இழந்த நிலையில் பெரும் பொருள் சேதத்திற்கு ஆளாகியுள்ள பொது மக்கள் மற்றும் வணிகர்களின் சிரமத்தை குறைப்பதில் GLC நிறுவனங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

கட்டங்களில் வாடகைக்கு இருக்கும் வணிகர்கள், மாதாந்திர தவணைப்பணத்தை வங்கிகளுக்குசெலுத்தி வரும் பொது மக்கள் ஆகியோரின் நிதி சிரமத்தில் அழுத்தம் கொடுக்காமல், பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு அரசாங்க சார்பு நிறுவனங்களுக்கு பிரதமர் வலியுறுத்தினார்.

குறிப்பாக கட்டடங்களின் வாடகைப்பணம் மற்றும் வங்கிகளுக்கு செலுத்தப்படும் தவணைப்பணம் விவகாரத்தில் பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் அதீத நெருக்குதல் கொடுக்க வேண்டாம் என்று அரசாங்க சார்பு நிறுவனங்களுக்கு பிரதமர் நினைவுறுத்தினார்.

Related News

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை