6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மூன்று மாநிலங்களை டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றுமானால் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவு மலேசியாவிற்கு ஏற்படலாம் என்ற பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிப்பகுதியின் முக்கிய மாநிலங்களாக சிலாங்கூரும், பினாங்கும் விளங்குகிறன. இந்த இரு மாநிலங்களை கைப்பற்றி, மூன்றாவதாக நெகிரி செம்பிலான் மாநிலத்தையும் பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றுமானால் நாட்டின் மொத்த உற்பத்தி விகிதம், அந்நிய நாட்டவர்களின் நேரடி முதலீடுகள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வளர்ச்சி விகிதத்தின் நகர்ச்சி பெரும் அளவில் பாதிக்கப்படும் என்று வர்த்தக, பொருளதார ஆய்வாளர்கள் எவ்.எம்.தி யிடம் தெரிவித்துள்ளனர்.
பெரிக்காத்தான் நேஷனலில் அங்கம் வகிக்கும் உறுப்புக்கட்சிகளின் மனோநிலைப் போக்கே இந்த பொருளாதார பின்டைவுக்கு முக்கிய காரணிகளாக அமையலாம் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.

Related News

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்

அமெரிக்க அதிபரின் வருகையை எதிர்த்து 700 பேர் ஆட்சேப மறியல்

கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 47-வது ஆசியான் உச்சி மாநாட்டின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது மலேசியா!

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் வாயைத் திறக்காதது ஏன்?

வழக்கை மீட்டுக் கொண்டார் கெடா மந்திரி பெசார்


