இணைய மோசடி மற்றும் சூதாட்டம் தொடர்பான அதிக ஆபத்துள்ள பதிவுகளை தானாகவே அகற்றும் நடைமுறையை செயல்படுத்துவதற்காக, சமூக ஊடக தளங்களுக்கு அரசாங்கம் அவகாசம் வழங்கியுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
இணைய பாதுகாப்புச் சட்டம் 2025 – இன் கீழ் சிறார் பாதுகாப்பு மற்றும் ஆபத்து குறைப்பு விதிமுறைகளைப் பின்பற்ற, சமூக ஊடக நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும், ஆனால் தங்களது உள்கட்டமைப்பை அதற்கேற்ப மாற்றுவதற்கு, கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இணைய மோசடி மற்றும் சூதாட்ட பதிவுகளை அகற்ற தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் விடுத்துள்ள கோரிக்கைகள் கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளதாகவும், ஒவ்வொரு பதிவையும் அகற்றும் நடவடிக்கைக்கு சுமார் 30 நிமிடங்கள் தேவைப்படுவதால் அதிகாரிகளின் பணிச்சுமை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.








