Mar 10, 2026
Thisaigal NewsYouTube
அன்வார் தலைமையிலான அரசாங்கத்தை மலாய்க்காரர்கள் முழு வீச்சில் எதிர்க்க வேண்டும்
அரசியல்

அன்வார் தலைமையிலான அரசாங்கத்தை மலாய்க்காரர்கள் முழு வீச்சில் எதிர்க்க வேண்டும்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தை மலாய்க்காரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முழு வீச்சில் எதிர்க்க வேண்டும் ​என்று முன்னாள் பிரதமர் துன் மகா​தீர் முகமது இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தமது தலைமையில் மலாய்க்காரர்கள் மீதான பிரகடனத்தை அறிவிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட மாநாட்டை ரத்து செய்துள்ள அன்வாரை, மலாய்க்காரர்கள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்று 97 வயதான துன் மகா​தீர் அறைகூவல் விடுத்துள்ளார்.

மலாய்க்காரர்கள் நலன் சார்ந்த விவகாரங்களை பேசுவதற்கு நாட்டின் அரசிலமைப்புச் சட்டத்திலும், அம்னோ சட்ட விதிகளிலும் இடம் அளிக்கப்பட்ட வேளையில் அந்த மாநாட்டை நடத்துவதற்கு முட்டுக்கட்டையாக மாறிய அன்வார் தலைமையிலான அரசாங்கத்தை மலாய்க்காரர்கள் ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது என்று துன் மகா​தீர் கேட்டுக்கொண்டார்.
அம்னோ, இனியும் மலாய்க்காரர்களுக்காக போராடக்கூடிய கட்சி அல்ல. எனவேதான் மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராக்கள் நலனை பாதுகாப்பதற்கு மற்றத் தரப்பினர் போராட வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்டுள்ளதாக துன் மகா​தீர் தெரிவித்துள்ளார்.

Related News

பெர்சத்து மகளிர் பிரிவுத் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கட்சியிலிருந்து இடைநீக்கம்

பெர்சத்து மகளிர் பிரிவுத் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கட்சியிலிருந்து இடைநீக்கம்

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

ரொனால்ட் கியாண்டி பெர்சத்துவில் இருந்து இடை நீக்கம்

ரொனால்ட் கியாண்டி பெர்சத்துவில் இருந்து இடை நீக்கம்

கோயில் விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டு சென்றார் அமைச்சர் ரமணன்: செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் தகவல்

கோயில் விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டு சென்றார் அமைச்சர் ரமணன்: செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் தகவல்

இனவாதத் தூண்டல்களைப் புறக்கணிப்போம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

இனவாதத் தூண்டல்களைப் புறக்கணிப்போம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்