முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, பாஸ் கட்சித் தலைவர் அப்துல் அவாங் ஹாடி மற்றும் கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர் ஆகிய மூவரும் மலாயா தீவிரவாதிகள் என்று சபாவைச் சேர்ந்த துவாரான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ வில்பிரட் மேடியஸ் டாங்காவ் சாடினார்.
இந்த மூவரும் ஒரே இன நாடாக மலேசியாவை மாற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டு இருக்கின்றனர். காலனித்துவக் காலத்திற்கு முன்னதாக தானா மேலாயு என்று மலாயா விளங்கியது. அதனை மீண்டும் நிலைநிறுத்தும் வகையில் இந்த மூவரின் அண்மையய கால பேச்சுக்கள் இருக்கின்றன என்று வில்பிரட் மேடியஸ் சுட்டிக்காட்டினார்.
பல இனங்கள், பல சமய நம்பிக்கைகள் போன்றவற்றைப் புறந்தள்ளிவிட்டு ஒரே சமயம், ஒரே இனம் என்ற அளவில் மறுபடியும் தானா மேலாயு என்று மலேசியாவின் பெயரை மாற்றுவதற்கு இந்த மூன்று மலாயா தீவிரவாதிகளும் முயற்சி செய்து வருகின்றனர் என்று வில்பிரட் மேடியஸ் குற்றஞ்சாட்டினார்.
இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கும், ஒற்றுமைக்கும்,சகிப்புத்தன்மைக்கும் இந்த மூவரும் தீ மூட்டி வருகின்றனர் என்று யு பி கே ஓ ( உப்கோ ) எனப்படும் கினபாலு முன்னேற்றக் கட்சியின் தலைவருமான வில்பிரட் மேடியஸ் குறிப்பிட்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


