முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, பாஸ் கட்சித் தலைவர் அப்துல் அவாங் ஹாடி மற்றும் கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர் ஆகிய மூவரும் மலாயா தீவிரவாதிகள் என்று சபாவைச் சேர்ந்த துவாரான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ வில்பிரட் மேடியஸ் டாங்காவ் சாடினார்.
இந்த மூவரும் ஒரே இன நாடாக மலேசியாவை மாற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டு இருக்கின்றனர். காலனித்துவக் காலத்திற்கு முன்னதாக தானா மேலாயு என்று மலாயா விளங்கியது. அதனை மீண்டும் நிலைநிறுத்தும் வகையில் இந்த மூவரின் அண்மையய கால பேச்சுக்கள் இருக்கின்றன என்று வில்பிரட் மேடியஸ் சுட்டிக்காட்டினார்.
பல இனங்கள், பல சமய நம்பிக்கைகள் போன்றவற்றைப் புறந்தள்ளிவிட்டு ஒரே சமயம், ஒரே இனம் என்ற அளவில் மறுபடியும் தானா மேலாயு என்று மலேசியாவின் பெயரை மாற்றுவதற்கு இந்த மூன்று மலாயா தீவிரவாதிகளும் முயற்சி செய்து வருகின்றனர் என்று வில்பிரட் மேடியஸ் குற்றஞ்சாட்டினார்.
இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கும், ஒற்றுமைக்கும்,சகிப்புத்தன்மைக்கும் இந்த மூவரும் தீ மூட்டி வருகின்றனர் என்று யு பி கே ஓ ( உப்கோ ) எனப்படும் கினபாலு முன்னேற்றக் கட்சியின் தலைவருமான வில்பிரட் மேடியஸ் குறிப்பிட்டார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


