கோலாலம்பூர், ஜனவரி.09-
அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள டத்தோ டாக்டர் முஹமட் அக்மால் சாலேவின் ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமையகம் இன்னும் பெறவில்லை என்று அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வஜ்டி டுசுகி தெரிவித்துள்ளார்.
டத்தோ டாக்டர் அக்மாலின் பதவி விலகல் தொடர்பான அறிவிப்பு, சமூக ஊடகங்களின் வாயிலாக தாங்கள் அறிந்த போதிலும் அது தொடர்பாக அதிகாரப்பூர்வமான கடிதத்தை டாக்டர் அக்மாலிடமிருந்து தாங்கள் இன்னும் பெறவில்லை என்று அஷ்ராஃப் வஜ்டி குறிப்பிட்டார்.
நடப்பு அரசாங்கத்திலிருந்து அம்னோ விலக வேண்டும் என்று தாங்கள் நடத்திய சிறப்பு இளைஞர் பிரிவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அம்னோ தலைமைத்துவம் கண்டு கொள்ளாததைத் தொடர்ந்து இளைஞர் பிரிவுத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக டாக்டர் அக்மால் அறிவித்து இருந்தார்.








