பினாங்கு, பிறை சட்டமன்றத்தொகுதியில் “மரம்” சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் டேவிட் மார்ஷல் ஆறாவது நாளாக தமது அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 15 ஆண்டு காலமாக பிறை மக்களுடன் ஒன்று கலந்தவராக திகழும் டேவிட் மார்ஷல், தொகுதியைச் சேர்ந்த இந்தியர்களும், சீனர்களும் தமக்கு அளித்து வரும் ஆதரவு உற்சாகத்தை அளிக்கும் வகையில் உள்ளதாக விவரித்தார்.
ஒரு சுயேட்சையாக போட்டியிடும் தமக்கு பிறை மக்கள் ஆதரவு அளித்து, ஒரு சட்டமன்ற உறுப்பினராக ஆக்குவார்களேயானால் புதியதொரு மாற்றத்தை நிச்சயம் எதிர்பார்க்க முடியும். பிறை மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று சமூகப் போராட்டவாதியுமான டேவிட் மார்ஷல் தெரிவித்துள்ளார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


