Jun 28, 2026
Thisaigal NewsYouTube
ஊடகவியாளர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவீர்
அரசியல்

ஊடகவியாளர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவீர்

Share:

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 08-

போலீஸ் துறை, அரசாங்கம் உட்பட அனைத்து தரப்பினரும் ஊடகவியலாளர்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்று டிஏபி- யைச் சேர்ந்த பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் சயரெட்சன் ஜோஹன் கோரிக்கை விடுத்துள்ளார்..

செய்தி வெளியிட்டது தொடர்பில் அதற்கான ஆதாரங்களை வெளியிடும்படி குற்றவியல் சட்டங்களை பயன்படுத்தி, ஊடகவியலாளர்களை கட்டாயப்படுத்தவது மற்றும் அழுத்தம் கொடுப்பது ஏற்புடைய செயல் அல்ல என்று சயரெட்சன் ஜோஹன் வலியுறுத்தினார்.

ஊடகவியலாளர்கள் வெளியிடக்கூடிய செய்தியின் ஆதாரங்கள், இரகசியமானவையாகும். அதுவே ஊடக சுதந்திரத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாகும். தங்களுக்கு கிடைத்த அந்த ஆதாரங்களை பாதுகாக்க வேண்டியது மிகப்பெரிய பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு உண்டு என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அரச மலேசிய போலீஸ் படையில் முக்கிய உயர் பதவிகளில் பெரிய அளவில் மாற்றம் செய்ய புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் திட்டமிட்டுள்ளதாக மலேசியா கினி இரண்டு தினங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டு இருந்தது.

எனினும் அந்த செய்தியை வன்மையாக மறுத்த புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம், அந்த செய்தி எவ்வாறு கிடைத்தது என்பதற்கான ஆதாரங்களை காட்டும்படி அந்த இணைய செய்தித் தளத்திற்கு எதிராக போலீஸ் புகார் செய்து இருப்பது தொடர்பில் அந்த டிஏபி எம்.பி. எதிர்வினையாற்றினார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்