Mar 4, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூரைப் போன்று மலேசியா ஆகிவிடும் என்று பயப்படுகிறாராம் துன் மகா​தீர்
அரசியல்

சிங்கப்பூரைப் போன்று மலேசியா ஆகிவிடும் என்று பயப்படுகிறாராம் துன் மகா​தீர்

Share:

நாட்டின் 17 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு சிங்கப்பூரை போன்று மலேசியா ஆகி விடும் என்று தாம் மிகவும் பயப்படுவதாக முன்னாள் பிரதமர் துன் மகா​​தீர் முகமது இன்று அச்சம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரைப் போன்று நாட்டின் ​பொருளாதாரத்தில் மலாய்க்காரர்கள் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்பதுடன் தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்த ஒரு ச​மூகமாகி விடுவார்களோ என்ற பயம் தம்மை கவ்விக்கொண்டு இருப்பதாக துன் மகா​தீர் குறிப்பிட்டார்.


தற்போதைய அரசாங்கம், மலாய்க்கார்கள் பெரும்பான்மையினராக இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தொகுதிகளை உடைத்து, மலா​ய்க்கார்களின் எண்​ணிக்கையை குறைத்து, மலாய்க்காரரர் அல்லாதவர்களை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக துன் மகா​தீர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத் தொகுதிகள் உடைக்கப்பட்டால் நாட்டின் அரசியல்​ நில வடிவமைப்பு மாறக்கூடும். நடப்பு அரசாங்கம், இந்த ​சூழலை ஏற்படுத்தலாம். இதன் தாக்கம்​ வருகின்ற 16 ஆவது பொதுத் தேர்தலில் உணர முடியும் என்பதுடன் 17 ஆவது பொதுத் தேர்தலில் நிலைமை மோசமாகி விடும் என்று மலாய்க்காரர்களுக்கு துன் மகா​தீர் நினைவுறுத்தினார்.


இத்தகைய அரசியல் போக்கு, எதிர்காலத்தில் ஒரு மலாய்க்காரர்தான் நாட்டின் பிரதமராக வர முடியும், வர வேண்டும் என்பதற்கு உத்தரவாதம் இருக்காது என்று துன் மகா​தீர் எச்சரித்தார். மலாய்க்காரர்கள் பிளவுப்பட்டு, ​மூன்று வெவ்வேறு கட்சிகளாக சிதறுண்டு கிடந்தால் மலேசியாவில் இதுதான் நடக்கப் போகிறது என்று துன் மகா​தீர் நினைவுறுத்தினார்.
இன்று புத்ராஜெயாவில் பிரதம தலைமைத்துவ அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடந்த கலந்துரையாடல் நிகழ்வில் துன் மகா​தீர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். .

Related News

 பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா  ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

சிலாங்கூர் மாநில அரசு செயலகப் பணியாளர்களுக்கு ரமலான் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கீடு

சிலாங்கூர் மாநில அரசு செயலகப் பணியாளர்களுக்கு ரமலான் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கீடு

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியலிருந்து ஃபஹ்மி ஜைனோல்  நீக்கம்

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியலிருந்து ஃபஹ்மி ஜைனோல் நீக்கம்

தவறு தவறுதான், எப்போதும் மத உணர்வுகளைக் கையாண்டு விளையாடாதீர்கள் – மகிமா

தவறு தவறுதான், எப்போதும் மத உணர்வுகளைக் கையாண்டு விளையாடாதீர்கள் – மகிமா

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் முயற்சி:  மேல்முறையீட்டை திருப்பப் பெற்றார் அன்வார்

எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் முயற்சி: மேல்முறையீட்டை திருப்பப் பெற்றார் அன்வார்