கடந்த ஒன்பது மாத காலமாக தொடர்ந்து வலுவுடன் இருந்து வரும் தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்த்து விட முடியாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 19 கட்சிகளை உள்ளடக்கிய ஒற்றுமை அரசாங்கம் மிக வலுவுடனும், நிலைத்தன்மையுடனும் இருப்பதால் அதன் ஆணிவேரை அவ்வளவு எளிதாக அசைத்துப்பார்த்து விட முடியாது என்று பிரதமர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டது என்றாலும் அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட அனைத்து தலைவர்களின் ஒத்துழைப்பும், இணக்கமான போக்கும் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
எனினும் ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் நடந்தன என்பதை பிரதமர் ஒப்புக்கொண்டார். ஆனால், 2023 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு அந்த சதிமுயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


