கடந்த ஒன்பது மாத காலமாக தொடர்ந்து வலுவுடன் இருந்து வரும் தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்த்து விட முடியாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 19 கட்சிகளை உள்ளடக்கிய ஒற்றுமை அரசாங்கம் மிக வலுவுடனும், நிலைத்தன்மையுடனும் இருப்பதால் அதன் ஆணிவேரை அவ்வளவு எளிதாக அசைத்துப்பார்த்து விட முடியாது என்று பிரதமர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டது என்றாலும் அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட அனைத்து தலைவர்களின் ஒத்துழைப்பும், இணக்கமான போக்கும் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
எனினும் ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் நடந்தன என்பதை பிரதமர் ஒப்புக்கொண்டார். ஆனால், 2023 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு அந்த சதிமுயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


