கடந்த ஒன்பது மாத காலமாக தொடர்ந்து வலுவுடன் இருந்து வரும் தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்த்து விட முடியாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 19 கட்சிகளை உள்ளடக்கிய ஒற்றுமை அரசாங்கம் மிக வலுவுடனும், நிலைத்தன்மையுடனும் இருப்பதால் அதன் ஆணிவேரை அவ்வளவு எளிதாக அசைத்துப்பார்த்து விட முடியாது என்று பிரதமர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டது என்றாலும் அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட அனைத்து தலைவர்களின் ஒத்துழைப்பும், இணக்கமான போக்கும் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
எனினும் ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சிகள் நடந்தன என்பதை பிரதமர் ஒப்புக்கொண்டார். ஆனால், 2023 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு அந்த சதிமுயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்

அமெரிக்க அதிபரின் வருகையை எதிர்த்து 700 பேர் ஆட்சேப மறியல்

கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 47-வது ஆசியான் உச்சி மாநாட்டின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது மலேசியா!

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் வாயைத் திறக்காதது ஏன்?

வழக்கை மீட்டுக் கொண்டார் கெடா மந்திரி பெசார்


