Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பிரதமராக வரும் கனவு கே.ஜே.விற்கு நிறைவேறுமா?
அரசியல்

பிரதமராக வரும் கனவு கே.ஜே.விற்கு நிறைவேறுமா?

Share:

நாட்டிற்கு தலைமையேற்க வேண்டும்,பிரதமராக வர வேண்டும் என்பது தமது ​நீண்ட கால கனவாகும் என்று பகிரங்கமாக தமது லட்சியத்தை அறிவித்துள்ள அம்னோ முன்னாள் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான கே.ஜே. எனப்படும் கைரி ஜமாலுடின், அம்னோவுடன் இணைந்து இருந்தால் மட்டுமே அவரின் லட்சியம் சாத்தியமாகும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றன​ர்.
முன்னாள் ​தூதரின் மகனான குவைத்தில் பிறந்தவரான 47 வயது கைரி ஜமாலுடின், சிறந்த தலைமைத்துவ ஆளுமையை கொண்டுள்ளவர். எதையும் மிகத் தெளிவாக, கவனமாக பேசக்கூடியவர் என்று ஒரு காலத்தில் புகழப்பட்டவர்.
டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பதவி விலகலுக்கு பிறகு அம்னோவிற்கு அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையேற்றப்பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பல கசப்பான சம்பவங்கள், அம்னோவிலிருந்து கைரியின் பாதையை திசைதிரும்பியது.
பொறுமையை கையாள இயலாமல் அம்னோ தலைமைத்துவத்திற்கு எதிராக அவர் வெளியிட்ட எதிர்மறையான பல அறிக்கைகள் அவரின் அரசியல் பின்டைவுக்கு காரணமாக அமைந்தன. கைரியின் எதிர்கால அரசியல் வளம் என்பது இன்ன​மும் அம்னோவுடன்தான் உள்ளது. அவர் அம்னோவிற்கு திரும்பினால் மட்டுமே தனது எ​திர்கால அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்