Apr 24, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்க வலியுறுத்தல்
அரசியல்

ஜோகூரில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்க வலியுறுத்தல்

Share:

ஜொகூர் , செப்டம்பர் 30-

மஹ்கொட்ட சட்டமன்ற இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வெற்றி பெற்ற நிலையில் ஜோகூர் மாநிலத்தில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமா? இல்லையா? என்பதை காலம் முடிவு செய்யட்டும் என அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் கருத்துரைத்துள்ளார்.

முன்னதாக ஜோகூர் மாநிலத்தில் தேசிய முன்னணியும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியும் இணைந்திருக்க வேண்டும் என ஒரு சில தரப்பினர் முன்வைத்த வலியுறுத்தல்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு காலிட் நோர்டின் மேற்கண்டவாறு பதில் கூறினார்.

ஜோகூர் மாநிலத்தை பொறுத்தவரையில் தற்போது பாரிசான் நேஷனலும், பக்காத்தான் ஹராப்பானும் இன்னும் ஆழமாக புரிந்துகொள்வது அவசியமாகின்றது.

அதுமட்டுமின்றி பாரிசான் நேஷனல், பக்காத்தான் ஹராப்பான் இடையிலான புரிந்துணர்வு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என அவர் கூறினார்.

முன்னதாக, மாக்கோத்தா சட்ட மன்ற இடைத்தேர்தலில் அதிகப் பெரும்பான்மையில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் வெற்றி பெற்றதை அடுத்து ஜோகூரில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என அமானா கட்சி இளைஞர் பிரிவுத் தலைவர் ஹேஸ்பிள் மூடா கருத்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ஜோகூரில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்க வலியுறுத்தல் | Thisaigal News