ஒற்றுமை அரசாங்கத்தில் ஓர் அங்கமாக விளங்கும் மஇகா, விரைவில் நடைபெறவிருக்கும் பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் தனது பாரம்பரியத் தொகுதிகளில் போட்டியிடப் போவதாக கூறப்படும் வாதத்தைப் பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி நிராகரித்துள்ளார்.
பினாங்கில் பாகான் டலாம் மற்றும் பிராய் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த 2008, 2013 மற்றும் 2018 ஆகிய 3 பொதுத் தேர்தல்களில் மஇகா படுதோல்விக் கண்டது.
மூன்று பொதுத் தேர்தல்களில் தொடர்ச்சியாக தோல்விக் கண்டுள்ள மஇகா, அந்த இரு தொகுதிகளையும் தனது பாரம்பரியத் தொகுதிகள் என்று எவ்வாறு கூறிக்கொள்ள முடியும் என்று டாக்டர் இராமசாமி வினவினார்.
இரு தொகுதிகளிலும் மஇகா தோற்கடிக்கப்பட்ட பின்னரும் அவை தங்களின் பாரம்பரியத் தொகுதிகள் என அக்கட்சி கூறிக்கொள்வது வியப்பை அளிக்கிறது என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.

Related News

பெர்சத்து மகளிர் பிரிவுத் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கட்சியிலிருந்து இடைநீக்கம்

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

ரொனால்ட் கியாண்டி பெர்சத்துவில் இருந்து இடை நீக்கம்

கோயில் விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டு சென்றார் அமைச்சர் ரமணன்: செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் தகவல்


