ஒற்றுமை அரசாங்கத்தில் ஓர் அங்கமாக விளங்கும் மஇகா, விரைவில் நடைபெறவிருக்கும் பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் தனது பாரம்பரியத் தொகுதிகளில் போட்டியிடப் போவதாக கூறப்படும் வாதத்தைப் பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி நிராகரித்துள்ளார்.
பினாங்கில் பாகான் டலாம் மற்றும் பிராய் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த 2008, 2013 மற்றும் 2018 ஆகிய 3 பொதுத் தேர்தல்களில் மஇகா படுதோல்விக் கண்டது.
மூன்று பொதுத் தேர்தல்களில் தொடர்ச்சியாக தோல்விக் கண்டுள்ள மஇகா, அந்த இரு தொகுதிகளையும் தனது பாரம்பரியத் தொகுதிகள் என்று எவ்வாறு கூறிக்கொள்ள முடியும் என்று டாக்டர் இராமசாமி வினவினார்.
இரு தொகுதிகளிலும் மஇகா தோற்கடிக்கப்பட்ட பின்னரும் அவை தங்களின் பாரம்பரியத் தொகுதிகள் என அக்கட்சி கூறிக்கொள்வது வியப்பை அளிக்கிறது என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட் - நெகிரியில் பரபரப்பு


