ஒற்றுமை அரசாங்கத்தில் ஓர் அங்கமாக விளங்கும் மஇகா, விரைவில் நடைபெறவிருக்கும் பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் தனது பாரம்பரியத் தொகுதிகளில் போட்டியிடப் போவதாக கூறப்படும் வாதத்தைப் பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி நிராகரித்துள்ளார்.
பினாங்கில் பாகான் டலாம் மற்றும் பிராய் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த 2008, 2013 மற்றும் 2018 ஆகிய 3 பொதுத் தேர்தல்களில் மஇகா படுதோல்விக் கண்டது.
மூன்று பொதுத் தேர்தல்களில் தொடர்ச்சியாக தோல்விக் கண்டுள்ள மஇகா, அந்த இரு தொகுதிகளையும் தனது பாரம்பரியத் தொகுதிகள் என்று எவ்வாறு கூறிக்கொள்ள முடியும் என்று டாக்டர் இராமசாமி வினவினார்.
இரு தொகுதிகளிலும் மஇகா தோற்கடிக்கப்பட்ட பின்னரும் அவை தங்களின் பாரம்பரியத் தொகுதிகள் என அக்கட்சி கூறிக்கொள்வது வியப்பை அளிக்கிறது என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
