நெகிரி செம்பிலான் மாநில தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் நான்கு நாட்களே எஞ்சியுள்ள வேளையில் ரெப்பா சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு ஐந்தாவது முறையாக போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் எஸ். வீரப்பன், வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வருகிறார். இதுவரை மக்கள் ஆதரவு நேர்மறையாக இருந்த போதிலும் அதிகமான வேலை வாய்ப்புகள் தம்பின் பகுதியில் உருவாக்கப்பட வேண்டும் என்ற மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, புதிய முதலீட்டாளர்கள் கொண்டு வரப்பட்டு சுமார் ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக வீரப்பன், திசைகளிடம் தெரிவித்தார்.
ரெப்பா தொகுதியை உள்ளடக்கிய தம்பின், பாதி நகர்புறமாகவும், பாதி புறநகரமாக இருந்த போதிலும் இங்குள்ள கால்நடை வளர்ப்பாளர்களுக்கு தேவையான மாட்டுத் தீவனங்களை விநியோகிக்கக்கூடிய நிறுவனங்கள் போன்றவற்றை கொண்டு வருவது மூலம் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று தாம் நம்புவதாக ரெப்பா தொகுதியில் பாரிசான் நேஷனல் வேட்பாளருடன் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியுள்ள வீரப்பன் தெரிவித்தார்.








