Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சுமார் ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு திட்டம்: வீரப்பன் கூறுகிறார்
அரசியல்

சுமார் ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு திட்டம்: வீரப்பன் கூறுகிறார்

Share:

நெகிரி செம்பிலான் மாநில தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் நான்கு நாட்களே எஞ்சியுள்ள வேளையில் ரெப்பா சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு ஐந்தாவது முறையாக போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் எஸ். வீரப்பன், வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வருகிறார். இதுவரை மக்கள் ஆதரவு நேர்மறையாக இருந்த போதிலும் அதிகமான வேலை வாய்ப்புகள் தம்பின் பகுதியில் உருவாக்கப்பட வேண்டும் என்ற மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, புதிய முதலீட்டாளர்கள் கொண்டு வரப்பட்டு சுமார் ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக வீரப்பன், திசைகளிடம் தெரிவித்தார்.

ரெப்பா தொகுதியை உள்ளடக்கிய தம்பின், பாதி நகர்புறமாகவும், பாதி புறநகரமாக இருந்த போதிலும் இங்குள்ள கால்நடை வளர்ப்பாளர்களுக்கு தேவையான மாட்டுத் தீவனங்களை விநியோகிக்கக்கூடிய நிறுவனங்கள் போன்றவற்றை கொண்டு வருவது மூலம் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று தாம் நம்புவதாக ரெப்பா தொகுதியில் பாரிசான் நேஷனல் வேட்பாளருடன் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியுள்ள வீரப்பன் தெரிவித்தார்.

Related News

அரண்மனையை அரசியலில் இழுப்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை: அமினுடின் ஹாரூன் எச்சரிக்கை

அரண்மனையை அரசியலில் இழுப்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை: அமினுடின் ஹாரூன் எச்சரிக்கை

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: பாதுகாப்புப் பணியில் 4,788 போலீசார் தீவிரம்

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: பாதுகாப்புப் பணியில் 4,788 போலீசார் தீவிரம்

சென்னா தொகுதியில் அந்தோனி லோக் கடும் சவாலை எதிர்கொள்வார் - ஓங் கியான் மிங் பகுப்பாய்வு

சென்னா தொகுதியில் அந்தோனி லோக் கடும் சவாலை எதிர்கொள்வார் - ஓங் கியான் மிங் பகுப்பாய்வு

இனவாத மற்றும் மத அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டும் - சிம் டி ஸின் வலியுறுத்தல்

இனவாத மற்றும் மத அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டும் - சிம் டி ஸின் வலியுறுத்தல்

 நெகிரி செம்பிலான் அரச பரிபாலன விவகாரம்: ஜசெக மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலிஸ் நிலையத்தில் புகார்

நெகிரி செம்பிலான் அரச பரிபாலன விவகாரம்: ஜசெக மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலிஸ் நிலையத்தில் புகார்

பிரித்தாளும் வெளிப்புற சக்திகளை புறந்தள்ளி, கூட்டு வலிமைக்கு முன்னுரிமை கொடுத்து சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும்: நெகிரி செம்பிலான் மாநில இந்திய சமூகத்திற்கு டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் அறிவுறுத்தல்!

பிரித்தாளும் வெளிப்புற சக்திகளை புறந்தள்ளி, கூட்டு வலிமைக்கு முன்னுரிமை கொடுத்து சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும்: நெகிரி செம்பிலான் மாநில இந்திய சமூகத்திற்கு டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் அறிவுறுத்தல்!