Mar 5, 2026
Thisaigal NewsYouTube
“குடியுரிமை மறுக்கப்பட்டது” என்ற வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்வீர்*
அரசியல்

“குடியுரிமை மறுக்கப்பட்டது” என்ற வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்வீர்*

Share:

கோலாலம்பூர், மார்ச் 21 -

கைவிடப்பட்ட பிள்ளைகள் தொடர்பான விவகாரங்களை விவாதிக்கும் போது அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது என்ற அடைமொழியை பயன்படுத்துவதை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபூடின் இஸ்மாயில் கேட்டுக்கொண்டுள்ளார்.

குடியுரிமை தொடர்பான கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்படும் போது, ஆளும் அரசாங்க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் இணைந்து விவாதிக்க வேண்டும் என்பதே உள்துறை அமைச்சின் எதிர்பார்ப்பாகும் என்று சைபுடின் விளக்கினார்.

சிறார்களின் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தொடர்பான விவாதத்தில் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க வேண்டும் என்று இன்று நாடாளுமன்றத்தில் சைபுடின் அழைப்பு விடுத்துள்ளார்.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் 19B பிரிவின் கீழ் மலேசிய பெற்றோர்களுக்கு பிறந்த குழந்தைகள், சொந்த பெற்றோரின் விவரங்களை அடையாளம் காண இயலாத பட்சத்தில் அக்குழந்தைகள் கைவிடப்பட்ட குழந்தைகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனவே மலேசியாவில் பிறந்த அந்த குழந்தைகளின் உரிமை காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த சட்டத்திருத்தம் அவசியமாகிறது என்று அமைச்சர் சைபுடின் விளக்கினார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்