Jun 28, 2026
Thisaigal NewsYouTube
“குடியுரிமை மறுக்கப்பட்டது” என்ற வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்வீர்*
அரசியல்

“குடியுரிமை மறுக்கப்பட்டது” என்ற வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்வீர்*

Share:

கோலாலம்பூர், மார்ச் 21 -

கைவிடப்பட்ட பிள்ளைகள் தொடர்பான விவகாரங்களை விவாதிக்கும் போது அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது என்ற அடைமொழியை பயன்படுத்துவதை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபூடின் இஸ்மாயில் கேட்டுக்கொண்டுள்ளார்.

குடியுரிமை தொடர்பான கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்படும் போது, ஆளும் அரசாங்க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் இணைந்து விவாதிக்க வேண்டும் என்பதே உள்துறை அமைச்சின் எதிர்பார்ப்பாகும் என்று சைபுடின் விளக்கினார்.

சிறார்களின் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தொடர்பான விவாதத்தில் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க வேண்டும் என்று இன்று நாடாளுமன்றத்தில் சைபுடின் அழைப்பு விடுத்துள்ளார்.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் 19B பிரிவின் கீழ் மலேசிய பெற்றோர்களுக்கு பிறந்த குழந்தைகள், சொந்த பெற்றோரின் விவரங்களை அடையாளம் காண இயலாத பட்சத்தில் அக்குழந்தைகள் கைவிடப்பட்ட குழந்தைகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனவே மலேசியாவில் பிறந்த அந்த குழந்தைகளின் உரிமை காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த சட்டத்திருத்தம் அவசியமாகிறது என்று அமைச்சர் சைபுடின் விளக்கினார்.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி