12ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு முழுமையான ஆதரவைத் வழங்க மஇகா எடுத்துள்ள முடிவை செந்தோசா சட்டமன்றத் தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வரவேற்றுள்ளார்.
இந்திய சமூகத்தைப் பிரதிநிதிக்கும் கட்சியான மஇகாவின் இந்த முடிவு இந்திய சமூகத்தில் ஒற்றுமைக்கு வித்திட்டுள்ளதோடு நாட்டின் அரசியலிலும் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குணராஜ் வர்ணித்துள்ளார். பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு ஆதரவு தருவது என்ற மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் முடிவு பாரட்டப்பட வேண்டிய ஒன்று. இதர விவகாரங்களைக் காட்டிலும் சமூகத்தின் நலனுக்கு அக்கட்சி முக்கியத்துவம் தருவதை அக்கட்சியின் இந்த நிலைப்பாடு புலப்படுத்துகிறது என்று அவர் குணராஜ் குறிப்பிட்டார்.

Related News

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு


