அடுத்த மாதம் 12 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஒன்றிணைந்துள்ள பக்காத்தான் ஹராப்பானும், பாரிசான் நேஷனலும் தங்களுக்கு இடையிலான கருத்துவேறுபாடுகளை முற்றாக ஒதுக்கிவைத்துவிட்டு, வெற்றி ஒன்றே பிரதானம் என்ற சுலோகத்தை தாங்கி நிற்கின்றன என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ செரி அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
இரு கூட்டணிகளுக்கு இடையில் ஒருவருக்கொருவர் சந்தேகமோ, அதிருப்தியோ இல்லை. தொகுதி ஒதுக்கீட்டில் அவை மனநிறைவு கொண்டுள்ளன. தொகுதி ஒதுக்கீடு தொடர்பான விவரங்கள் கூட்டணியின் தலைமைத்துவத்தினால் விரைவில் அறிவிக்கப்படும் என்று சிலாங்கூர் மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.
தமது முன்னாள் சட்டமன்றத் தொகுதியான பத்துகேவ்ஸ், சுங்ஙை துவாவில் தேர்தல் கேந்திரத்தை முடுக்கி விடும் நிகழ்வில் உரையாற்றுகையில் அமிருடின் ஷாரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


