மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விவாதிக்க, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் தேசிய பொருளாதார நடவடிக்கைக் குழு கூட்டம் நாளை மார்ச் 31-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில், உலகளாவிய புவிசார் அரசியல் மாற்றங்களால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய சவால்கள், எரிபொருள் விலை உயர்வு மற்றும் வர்த்தகப் போக்குவரத்து பாதிப்புகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








