தாம் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் கைப்பாவை என்று கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை மூவார் நாடாளுமன்ற உறுப்பினரும், மூடா கட்சியின் தலைவருமான சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் மறுத்துள்ளார்.
தாம் யாருடைய கைப்பாவையும் அல்ல என்றும், இது தொடர்பாக தாம் மக்களுக்கும் கடவுளுக்கும் மட்டுமே பதிலளிக்க விரும்புவதாகவும் நேற்று வியாழக்கிழமை தமது முகநூல் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை, ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்களாகியும், அமைச்சரவையில் சொத்துக்கள் குறித்து விளக்கம் அளிக்காதது தொடர்பாக, தாம் கேள்வி எழுப்பிய போது, அவர்களால் அதற்கு பதில் அளிக்க முடியாத நிலையில், பிறரின் கைப்பாவை என்ற லேபிள்களின் மூலம் மக்களின் கவனத்தை திசை திருப்பியதாக சையிட் சாடிக் விளக்கமளித்துள்ளார்.
அமைச்சர்களிடையே முறைகேடுகள் ஏற்படுவதைத் தவிர்க்க சொத்துப் பத்திரப்பதிவு என்பது ஒரு நல்ல வழியாகும். இருப்பினும், இந்த விஷயத்திற்கு நெட்டிசன்களிடமிருந்து சில எதிர்மறையான பதில்கள் கிடைத்தது மட்டுமின்றி, டாக்டர் மகாதீரின் அறிவுறுத்தலின் காரணமாக தாம் இதனை செய்ததாக கூறியிருப்பது முற்றிது தவறானதாக என்று சையிட் சாடிக் தெரிவித்தார்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


