Dec 16, 2025
Thisaigal NewsYouTube
நேர்மையின் குரலாக விளங்குவார் முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர்
அரசியல்

நேர்மையின் குரலாக விளங்குவார் முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர்

Share:

ஷா ஆலாம், ஜூன்.16-

அம்னோவில் ஓர் உறுப்பினராக இணைந்துள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ ஸுல்கிஃப்லி அஹ்மாட், கட்சியில் நேர்மையின் குரலாக விளங்குவார் என்று அதன் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் முகமட் புவாட் ஸர்காஷி வர்ணித்துள்ளார்.

எந்தவோர் உயர் பதவியோ அல்லது சலுகையோ கோராமல் சந்தடியின்றி, அம்னோவுடன் தனது வாழ்வை பிணைத்துக் கொண்டுள்ள ஸுல்கிஃப்லி அஹ்மாட் வரவு, அம்னோவை மிளிரச் செய்யும் நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

அம்னோவில் ஓர் உறுப்பினராகச் சேர்வதற்கு ஸுல்கிஃப்லி அஹ்மாட் பெரிய தலையை நாடவில்லை. மாறாக, ஒரு கிளையின் தலைவரை அணுகியுள்ளார். பின்னர் டிவிஷன் தலைவரை நாடியுள்ளார். இதுவே ஸுல்கிஃப்லி அஹ்மாட்டின் தனித்துவமானச் சிறப்பாகும் என்று புவாச் ஸர்காஷி தெரிவித்துள்ளார்.

Related News

சபா இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் கூடியது

சபா இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் கூடியது

பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை

பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை

தோல்வியை மறைக்க மஇகா முயற்சிகிறது: அம்னோ இளைஞர் பிரிவு சாடல்

தோல்வியை மறைக்க மஇகா முயற்சிகிறது: அம்னோ இளைஞர் பிரிவு சாடல்

"மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்" - சபா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வலியுறுத்து

"மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்" - சபா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வலியுறுத்து

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை மஇகா பிஎன் கூட்டணியிலேயே தொடரும் - டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தகவல்

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை மஇகா பிஎன் கூட்டணியிலேயே தொடரும் - டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தகவல்

கட்சிப் பணத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு: முஹிடின் புகார் அளிக்க வேண்டும் - பி.கே.ஆர். இளைஞரணி வலியுறுத்தல்!

கட்சிப் பணத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு: முஹிடின் புகார் அளிக்க வேண்டும் - பி.கே.ஆர். இளைஞரணி வலியுறுத்தல்!