வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தொகுதிகள் கேட்டு மஇகா விண்ணப்பித்துள்ளதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எனினும் அது குறித்து தேசிய முன்னணி தலைமை இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில் எந்ததெந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கு மஇகா திட்டமிட்டுள்ளது என்பது பற்றிய விவரத்தை விக்னேஸ்வரன் வெளியிடவில்லை.
கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் ஈஜோக், சுங்கை துவா மற்றும் செந்தோசா ஆகிய தொகுதிகளிலும், கெடா மாநிலத்தில் லூனாஸ் மற்றும் புக்கிட் செலம்பாவ் ஆகிய தொகுதிகளிலும், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஜெரம் பாடாங் மற்றும் ஸ்ரீ தஞ்சோங் ஆகிய தொகுதிகளில் மஇகா
போட்டியிட்டது. இவற்றில் ஜெரம் பாடாங் தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளில் மஇகா தோல்விக் கண்டது.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
