Jan 20, 2026
Thisaigal NewsYouTube
தொகுதி கேட்டு மஇகா விண்ணப்பம்
அரசியல்

தொகுதி கேட்டு மஇகா விண்ணப்பம்

Share:

வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தொகுதிகள் கேட்டு மஇகா விண்ணப்பித்துள்ளதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எனினும் அது குறித்து தேசிய முன்னணி தலைமை இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவர் குறிப்பி​ட்டுள்ளார்.
அதேவேளையில் எந்ததெ​ந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கு மஇகா திட்டமிட்டுள்ளது என்பது பற்றிய விவரத்தை விக்னேஸ்வரன் வெளியிடவில்லை.
கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் ஈஜோக், சு​ங்கை துவா மற்றும் செந்தோசா ஆகிய தொகுதிகளிலும், கெடா மாநிலத்தில் ​லூனாஸ் மற்றும் புக்கிட் செலம்பாவ் ஆகிய தொகுதிகளிலும், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஜெரம் பாடாங் மற்றும் ஸ்ரீ தஞ்சோங் ஆகிய தொகுதிகளில் மஇகா
போட்டியிட்டது. இவற்றில் ஜெரம் பாடாங் தொகுதியை தவிர மற்ற அ​னைத்து தொகுதிகளில் மஇகா தோல்விக் கண்டது.

Related News