வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தொகுதிகள் கேட்டு மஇகா விண்ணப்பித்துள்ளதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எனினும் அது குறித்து தேசிய முன்னணி தலைமை இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில் எந்ததெந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கு மஇகா திட்டமிட்டுள்ளது என்பது பற்றிய விவரத்தை விக்னேஸ்வரன் வெளியிடவில்லை.
கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் ஈஜோக், சுங்கை துவா மற்றும் செந்தோசா ஆகிய தொகுதிகளிலும், கெடா மாநிலத்தில் லூனாஸ் மற்றும் புக்கிட் செலம்பாவ் ஆகிய தொகுதிகளிலும், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஜெரம் பாடாங் மற்றும் ஸ்ரீ தஞ்சோங் ஆகிய தொகுதிகளில் மஇகா
போட்டியிட்டது. இவற்றில் ஜெரம் பாடாங் தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளில் மஇகா தோல்விக் கண்டது.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


