அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் டிஏபி வேட்பாளர்களின் பெயர்கள் இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் பினாங்கு துணை முதலமைச்சரும்,பிறை சட்டமன்றத் தொகுதியில் கடந்த 3 தவணைக்காலம் சிறப்பான முறையில் சேவையாற்றியவருமான டாக்டர் பி.இராமசாமி, வேட்பாளர் பட்டியலிருந்து விடுபட்டுள்ளார்.
இந்திய சமூகத்தின் இனமான போராட்டவாதியான 74 வயது டாக்டர் இராமசாமிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று ஊடகங்கள் இன்று கோடிகாட்டியுள்ளன.
கடந்த 2008 ஆம் ஆண்டு 12 ஆவது பொதுத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தில் கெராக்கான் தலைமையிலான 39 ஆண்டு கால பாரிசான் நேஷனல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்களிப்பு வழங்கிய டிஏபி தலைவர்களில் ஒருவரான டாக்டர் இராமசாமி, பத்து கவான் நாடாளுமன்றத் தொகுதியிலும் பிறை சட்டமன்றத் தொகுதியிலும் ஏகக்காலத்தில் நின்று, இரு தொகுதிகளிலும் பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்று, பினாங்கில் டிஏபி ஆட்சி நிறுவப்படுவதற்கு முக்கியப் பங்களிப்பை வழங்கினார்.
மலேசிய வரலாற்றில் இந்திய ஒருவர், மாநிலம் ஒன்றுக்கு முதல் முறையாக துணை முதலமைச்சராக பதவியேற்ற வரலாற்றை பதிவு செய்தவரான டாக்டர் இராமசாமி, 3 தவணைக்காலம் தற்காத்து வந்த பிறை சட்டமன்றத் தொகுதியில் மற்றொரு இந்திய வேட்பாளர் நிறுத்தப்படவிருக்கிறார்.
எக்கோ வேர்ல் டெவெலப்மென் குருப் பெர்ஹாட்டின் முன்னாள் துணை தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ எஸ்.ராஜு என்பவர், பிறை சட்டமன்றத்தொகுதியில் டிஏபி வேட்பாளராக நிறுத்தப்படவிருக்கிறார் எ ன்று ஊடகங்கள் கோடிகாட்டியுள்ளன.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


