Apr 23, 2026
Thisaigal NewsYouTube
பிரதமரின் சிறப்புப் பணியாளர் திரு. சண்முகம் மூக்கன் இந்த முயற்சியை ஒருங்கிணைத்தார்
அரசியல்

பிரதமரின் சிறப்புப் பணியாளர் திரு. சண்முகம் மூக்கன் இந்த முயற்சியை ஒருங்கிணைத்தார்

Share:

டிச. 11-

ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 308 குடும்பங்களுக்கு கடந்த டிசம்பர் 9, 10 ஆம் தேதிகளில் பிரதமர் அன்வார் இப்ராஹிம், நிவாரணப் பொருட்கள் வழங்கினார். மடானி அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக, பிரதமரின் சிறப்புப் பணியாளர் திரு. சண்முகம் மூக்கன் இந்த முயற்சியை ஒருங்கிணைத்தார்.

இயற்கை சீற்றத்தின் போது , மக்களின் நலன் முன்னுரிமையாகக் கொள்ளப்படுவதை இது உறுதி செய்கிறது. டிசம்பர் 9 ஆம் தேதி தங்காக்கில் 50 குடும்பத் தலைவர்களுக்கு உதவி நிதியும் மறுநாள் டிசம்பர் 10ஆம் தேதி 231 உணவுக் கூடைகளும் வழங்கப்பட்டதாக சண்முகம் குறிப்பிட்டார்.

பிரதமர் அலுவலகம், சமூகத் தொடர்புத் துறை J-KOM, மாவட்ட அலுவலகங்கள், மலேசிய கூட்டுறவு ஆணையம் ஆகியவற்றுக்கு இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பின் மூலம் ஒவ்வோர் உதவி பெறுநரும் அடையாளம் காணப்பட்டதாக சண்முகம் கூறினார்,

மடானி அரசாங்கம் முன்னெடுக்கும் எந்தவொரு திட்டமும் மக்களின் நலத்தை முன்னிருத்தியே வகுக்கப்படுகிறது.
மக்களின் நலனில் கவனம் செலுத்தும் ஒரு உத்தியாக, இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில் வழங்கப்படும் உதவி பெரும் தாக்கத்தை மக்களுக்கு ஏற்படுத்தும் என்றார் அவர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகளில் இதுபோன்ற முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள அரசாங்கம் உறுதியளிப்பதாகவும் சண்முகம் குறிப்பிட்டார்,

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!