நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு புத்ராஜெயாவில் உள்ள தேர்தல் ஆணையத்தின் தலைமையகம் மற்றும் சில அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகங்களில் போலீசாரின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் சின் தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடம் அரசியல் கட்சிகள் மற்றும் ஆதரவாளர்களின் இலக்குக்குரிய பகுதிகளாக அவை இருப்பதால் அவற்றை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் கோலாலம்பூர் சம்பந்தப்படவில்லை. ஆனால், அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசியல் ஆதரவாளர்கள் சந்திப்பு மற்றும் ஊர்வலம் நடத்துதற்கு கோலாலம்பூரை ஒரு தளமாக பயன்படுத்தக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாக முகமட் ஷுஹைலி குறிப்பிட்டார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


