நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு புத்ராஜெயாவில் உள்ள தேர்தல் ஆணையத்தின் தலைமையகம் மற்றும் சில அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகங்களில் போலீசாரின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் சின் தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடம் அரசியல் கட்சிகள் மற்றும் ஆதரவாளர்களின் இலக்குக்குரிய பகுதிகளாக அவை இருப்பதால் அவற்றை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் கோலாலம்பூர் சம்பந்தப்படவில்லை. ஆனால், அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசியல் ஆதரவாளர்கள் சந்திப்பு மற்றும் ஊர்வலம் நடத்துதற்கு கோலாலம்பூரை ஒரு தளமாக பயன்படுத்தக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாக முகமட் ஷுஹைலி குறிப்பிட்டார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


