நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு புத்ராஜெயாவில் உள்ள தேர்தல் ஆணையத்தின் தலைமையகம் மற்றும் சில அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகங்களில் போலீசாரின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் சின் தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடம் அரசியல் கட்சிகள் மற்றும் ஆதரவாளர்களின் இலக்குக்குரிய பகுதிகளாக அவை இருப்பதால் அவற்றை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் கோலாலம்பூர் சம்பந்தப்படவில்லை. ஆனால், அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசியல் ஆதரவாளர்கள் சந்திப்பு மற்றும் ஊர்வலம் நடத்துதற்கு கோலாலம்பூரை ஒரு தளமாக பயன்படுத்தக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாக முகமட் ஷுஹைலி குறிப்பிட்டார்.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்


