நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு புத்ராஜெயாவில் உள்ள தேர்தல் ஆணையத்தின் தலைமையகம் மற்றும் சில அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகங்களில் போலீசாரின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் சின் தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடம் அரசியல் கட்சிகள் மற்றும் ஆதரவாளர்களின் இலக்குக்குரிய பகுதிகளாக அவை இருப்பதால் அவற்றை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் கோலாலம்பூர் சம்பந்தப்படவில்லை. ஆனால், அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசியல் ஆதரவாளர்கள் சந்திப்பு மற்றும் ஊர்வலம் நடத்துதற்கு கோலாலம்பூரை ஒரு தளமாக பயன்படுத்தக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாக முகமட் ஷுஹைலி குறிப்பிட்டார்.

Related News

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா


