நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கு 6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத்தேர்தல் மிக முக்கியத்தவம் வாய்ந்தது என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார். இந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டரசு அரசாங்கம் சம்பந்தப்படவில்லை என்ற போதிலும் இச்சட்டமன்றத் தேர்தலை அலட்சியமாக கருதி விட முடியாது என்று போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் திட்டவட்டமாக தெரிவித்தார்.
டிஏபி துணைத் தலைவர் கோபிந்த் சிங் டியோ தலைமையில் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் நேற்று இரவு நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மேற்கண்டவாறு அந்தோணி லோக் பதில் அளித்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று, ஆட்சியை கைப்பற்றிவிட்டோம் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மெத்தனப் போக்குடன் இருந்து விட முடியாது. 6 மாநிலங்களின் ஆட்சி என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தாகும். இந்த ஆறு மாநிலங்கள், மத்திய அரசாங்கத்தின் முதுகெலும்பு என்பதையும் அந்தோணி லோக் விளக்கினார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


