நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கு 6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத்தேர்தல் மிக முக்கியத்தவம் வாய்ந்தது என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார். இந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டரசு அரசாங்கம் சம்பந்தப்படவில்லை என்ற போதிலும் இச்சட்டமன்றத் தேர்தலை அலட்சியமாக கருதி விட முடியாது என்று போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் திட்டவட்டமாக தெரிவித்தார்.
டிஏபி துணைத் தலைவர் கோபிந்த் சிங் டியோ தலைமையில் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் நேற்று இரவு நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மேற்கண்டவாறு அந்தோணி லோக் பதில் அளித்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று, ஆட்சியை கைப்பற்றிவிட்டோம் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மெத்தனப் போக்குடன் இருந்து விட முடியாது. 6 மாநிலங்களின் ஆட்சி என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தாகும். இந்த ஆறு மாநிலங்கள், மத்திய அரசாங்கத்தின் முதுகெலும்பு என்பதையும் அந்தோணி லோக் விளக்கினார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


