Oct 18, 2025
Thisaigal NewsYouTube
சுங்கை பகப் மருத்துவமனை பணியாளர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு
சிறப்பு செய்திகள்

சுங்கை பகப் மருத்துவமனை பணியாளர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு

Share:

பினாங்கு, அக்டோபர் 29-

தீபாவளி போன்ற பண்டிகை காலங்களிலும் மக்களுக்கு சேவையாற்றும் உன்னதப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவப்பணியாளர்களின் அளப்பரிய சேவையை போற்றும் வகையில் பினாங்கு, சுங்கை பகப் மருத்துவப் பணியாளர்களுக்கு மேலவை உறுப்பினர் டாக்டர் லிங்கேஸ்வரன் தீபாவளி அன்பளிப்புகளை வழங்கி சிறப்பு செய்தார்.

சுங்கை பகப் மருத்துவமனையின் முன்னாள் மருத்துவ அதிகாரி என்ற முறையில் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மருத்தவப்பணியாளர்களின் இடைவிடாத சேவை, அவர்களின் அர்ப்பணிப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது, எவ்வளவு கட்டாயமானது என்பதை தாம் உணர்ந்துள்ளதாக டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

மருத்துவப் பணிகள் மத்தியிலும் தீபாவளி பண்டிகையின் போது மகிழ்ச்சியுடன் தங்கள் பணிகளை தொடர வேண்டும் என்ற நோக்கிலேயே தீபாவளி அன்பளிப்பை அனைத்துப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

சுங்கை பகப் மருத்துவமனையில் இந்தியப் பணியாளர்கள் மட்டுமின்றி மலாய்க்காரர்கள் மற்றும் சீனர்கள் என அனைத்துப் பணியாளர்களுக்கும் தீபாவளி அன்பளிப்பை வழங்கிய டாக்டர் லிங்கேஸ்வரன், தீபாவளி நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.

Related News

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி