Jun 25, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பகப் மருத்துவமனை பணியாளர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு
சிறப்பு செய்திகள்

சுங்கை பகப் மருத்துவமனை பணியாளர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு

Share:

பினாங்கு, அக்டோபர் 29-

தீபாவளி போன்ற பண்டிகை காலங்களிலும் மக்களுக்கு சேவையாற்றும் உன்னதப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவப்பணியாளர்களின் அளப்பரிய சேவையை போற்றும் வகையில் பினாங்கு, சுங்கை பகப் மருத்துவப் பணியாளர்களுக்கு மேலவை உறுப்பினர் டாக்டர் லிங்கேஸ்வரன் தீபாவளி அன்பளிப்புகளை வழங்கி சிறப்பு செய்தார்.

சுங்கை பகப் மருத்துவமனையின் முன்னாள் மருத்துவ அதிகாரி என்ற முறையில் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மருத்தவப்பணியாளர்களின் இடைவிடாத சேவை, அவர்களின் அர்ப்பணிப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது, எவ்வளவு கட்டாயமானது என்பதை தாம் உணர்ந்துள்ளதாக டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

மருத்துவப் பணிகள் மத்தியிலும் தீபாவளி பண்டிகையின் போது மகிழ்ச்சியுடன் தங்கள் பணிகளை தொடர வேண்டும் என்ற நோக்கிலேயே தீபாவளி அன்பளிப்பை அனைத்துப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

சுங்கை பகப் மருத்துவமனையில் இந்தியப் பணியாளர்கள் மட்டுமின்றி மலாய்க்காரர்கள் மற்றும் சீனர்கள் என அனைத்துப் பணியாளர்களுக்கும் தீபாவளி அன்பளிப்பை வழங்கிய டாக்டர் லிங்கேஸ்வரன், தீபாவளி நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!