Apr 27, 2026
Thisaigal NewsYouTube
‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் அவர்களின் 147- ஆவது பிறந்தநாள் விழா
சிறப்பு செய்திகள்

‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் அவர்களின் 147- ஆவது பிறந்தநாள் விழா

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.30-

மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில், ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் அவர்களின் 147- ஆவது பிறந்தநாள் விழா, கழகத் தலைவர், மானமிகு. நாக.பஞ்சு அவர்களின் தலைமையில், கடந்த 28.9.2025 ஆம் நாளன்று நண்பகல் 2.30 மணியளவில், கோலாலம்பூர், பிரிக்பீல்ஸ் பாடாங் பெலியா சாலையில் அமைந்துள்ள ருக்குன் தெத்தாங்கா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மேனாள் தலைமை ஆசிரியர், மதிப்புமிகு. மு. கெங்கம்மாள் மலையரசன் அவர்கள் தொடக்கி வைத்து உரையாற்றினார். கழக மதியுரைஞர், ‘கொள்கைச்சுடர்’ இரெ.சு.முத்தையா அவர்கள் சிறப்புரையாற்றினார். விழாவில், கழக இளைஞரணித் தலைவர், மானமிகு. ஆதித்தன் மகாமுனி அவர்களின் சொல்லரங்கம் நடைபெற்றது.

அச்சொல்லரங்கும் 1இல், ‘நாளைய இளைஞர்களின் சிந்தனைச் சீர்த்திருத்தம்’ என்ற தலைப்பில் தோழர், ச. பிரபுதேவா அவர்களும் சொல்லரங்கம் 2இல், ‘பெண்களின் முன்னேற்றம்’ எனும் தலைப்பில் தோழர், ச. கலையரசன் அவர்களும் சொல்லரங்கம் 3இல், ‘சமுதாய முன்னேற்றம்’ எனும் தலைப்பில், தோழர், செ. யாழன் அவர்களும் அரங்கம் அதிரப் பேசினர்.

‘பெரியார் பெருந்தொண்டர்’ பாவலர், கு.க. இராமன் அவர்களின் தலைமையில், பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, வண்ணம் தீட்டும் போட்டி, அறிவுப் புதிர் போட்டிகளென பல அங்கங்கள் இடம் பெற்றன.

விழாவில், கழகத் தோழமை இயக்கங்களான மலேசிய திராவிடர் கழகத் தேசியத் தலைவர் மானமிகு. சா. பாரதி, மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் துணைத் தலைவர், மானமிகு. த. பரமசிவம் அதன் பொதுச் செயலாளர், மானமிகு. சி.மு. விந்தைக்குமரன் மற்றும் கழகத் தோழர்களும் பொதுமக்களும் ஆசிரியர்களும் கலந்து விழாவைச் சிறப்பித்தனர்.

Related News

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு