Apr 27, 2026
Thisaigal NewsYouTube
பகான் டாலாமில் 2.0 ஒற்றுமை ஓட்டம்
சிறப்பு செய்திகள்

பகான் டாலாமில் 2.0 ஒற்றுமை ஓட்டம்

Share:

பகான் டாலாம், நவம்பர்.17-

அன்றாட வேலைகளில் அலுவல்கள் காரணமாக ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நேரத்திலும் ஆரோக்கியத்திற்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒற்றுமை ஓட்டம் 2.0 பட்டர்வொர்த், பகான் டாலாம், பாகான் லுவார் டுவாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

சுமார் 1,500 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட இந்த ஒற்றுமை ஓட்ட நிகழ்வை பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஜும்பா, அதிர்ஷ்டக் குலுக்கல் போன்ற நடவடிக்கைகள் நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தன. மலாய், சீனர், இந்தியர் என மூவின மக்களும் கலந்து கொண்டவர்களுக்கு மின் சான்றிதழும் 5 கி.மீ. ஓடி முடித்தவர்களுக்குப் பதக்கமும் வழங்கப்பட்டன.

அது மட்டுமல்லாமல், பங்கேற்பாளர்களுக்கு உற்சாகமூட்டும் வண்ணம் ஒலிகோ, விகோ, சன்குயிக், 100 பிளஸ் முதலிய பானங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி வெற்றியடையச் செய்யும் நோக்கில் பலர் முன்வந்து நன்கொடைகள் வழங்கியுள்ளனர்.

முதன்மை நன்கொடையாளராக ஃபதர் டோப் கோல்ட் டத்தோ டான் தியூவ திகழ்ந்ததுடன் லிம் குவான் எங் 5 ஆயிரம் ரிங்கிட்டை வழங்கினார். வேக்கிங் நகைக்கடை மூலம் டாமோன் வோங் அதிர்ஷ்ட குலுக்கில் வெற்றி பெற்ற முதல் பத்து நபர்களுக்கு தங்கக் காசை பரிசாக வழங்கினார்கள்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் குமரன் கிருஷ்ணன் பேசுகையில் இது போன்ற நிகழ்ச்சி மக்களை இன்னும் ஆரோக்கித்துடனும் உற்சாகத்துடனும் இருக்கச் செய்கிறது. எனவே, இனி வரும் காலங்களிலும் இது போன்ற நிகழ்ச்சி இன்னும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும் என்று தமது உரையில் குமரன் கிருஷ்ணன் குறிப்பிட்டார்.

லிம் குவான் எங் பேசுகையில், நாம் எல்லாரும் ஆரோக்கியமாக இருப்பதற்கு இது போன்ற நிகழ்ச்சி மிக அவசியமாகும். அதிலும் குறிப்பாக நாம் பாகான் தொகுதியை மேலும் சிறப்படையைச் செய்ய வேண்டும். எல்லோரும் அறிந்தது போல பாகான் தொகுதியில் பல மேம்பாட்டு வசதிகள் ஏற்பாடு செய்து தரப்பட்டிருக்கிறது என்றார். UTC PENANG SENTRAL, JURU - SUNGAI DUA நெடுஞ்சாலைத் திட்டம், LRT ரயில் திட்டம், BUTTERWORTH DIGITAL LIBRARY என பல உன்னதத் திட்டங்கள் ஆகியவை பினாங்கு மாநிலத்தில் திட்டமிட்டு அதனை செய்து கொண்டு வருகிறோம். மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் லிம் குவான் எங் தமது உரையில் கேட்டுக் கொண்டார்.

Related News

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு