Apr 27, 2026
Thisaigal NewsYouTube
2026 பட்ஜெட் இந்திய சமூகத்திற்கு பல்வேறு அனுகூலங்களை வழங்க வல்லதாகும்
சிறப்பு செய்திகள்

2026 பட்ஜெட் இந்திய சமூகத்திற்கு பல்வேறு அனுகூலங்களை வழங்க வல்லதாகும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.13-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், வரும் அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளித் திருநாளைக் கொண்டாடவிருக்கும் இந்திய சமூகத்திற்கு பல்வேறு அனுகூலங்களை வழங்க வல்லதாகும் என்று தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர்.ரமணன் தெரிவித்தார்.

அதே வேளையில் இந்திய சமூகம் உட்பட மலேசியர்கள், ஒவ்வொரு நிலையிலும் நாட்டின் பிரதான பொருளாதார வளர்ச்சி நீரோட்டத்திலிருந்து விடுபட்டு விமாமல் இருப்பதை உறுதிச் செய்வதற்கு மடானி அரசாங்கத்தின் வலுவான கட்டமைப்பின் உறுதிப்பாட்டை, இந்த பட்ஜெட் பிரதிபலிக்கிறது என்று டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

எஸ்கேஎம் எனப்படும் மலேசிய கூட்டுறவு ஆணையம் மற்றும் மேலும் சில தரப்பினருடன் இணைந்து தாம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சுங்கை பூலோ தொகுதியில் மடானி மலிவு விற்பனைத் திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் 2026 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்தியர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அனுகூலங்கள் குறித்து டத்தோ ஶ்ரீ ரமணன் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

மித்ரா, தெக்குன், அமானா இக்தியார் ஆகியவற்றிற்கு 220 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடானது, பல்வேறு தொழில்முனைவோர், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் இந்திய சமூகவியல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பெரும் உந்துதலாக இருக்கும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு