கோலாலம்பூர், அக்டோபர்.10-
அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு முறை வழங்கப்படக்கூடிய தலா 500 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இதே போன்று பணி ஓய்வு பெற்ற முன்னாள் அரசாங்க ஊழியர்களுக்கு தலா 250 ரிங்கிட் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
அடுத்த வருடம் மார்ச் மாதம் ஹரிராயா பெருநாளுக்கு முன்னதாகவே இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.








