Jan 21, 2026
Thisaigal NewsYouTube
இளம் எழுத்தாளர் கிரிஷ் ஹரன் நாயருக்கு சிறப்பு விருது
சிறப்பு செய்திகள்

இளம் எழுத்தாளர் கிரிஷ் ஹரன் நாயருக்கு சிறப்பு விருது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.24-

இளம் எழுத்தாளரான கிரிஷ் ஹரன் நாயருக்குச் சிறப்பு விருது வழங்கப்பட்டு, கெளரவிக்கப்பட்டுள்ளது. நேற்று கோலாலம்பூர், ஸ்டெடியம் மெர்டேக்கா அரங்கில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான சிறுவர்கள் தினத்தையொட்டி கிரிஷ் ஹரன் நாயருக்கு இந்தச் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ நொராய்னியுடன் இணைந்து பிரதமரின் துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், இந்தச் சிறப்பு விருதை கிரிஷ் ஹரனுக்கு வழங்கினார்.

எழுத்துத்துறையில் சமூக நல பங்களிப்புக்காக அவருக்கு இந்தச் சிறப்பு விருது, மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

The Mysterious War To The Deep எனும் நூலை எழுதியது மூலம் மக்களின் கவன ஈர்ப்பைப் பெற்ற கிரிஷ் ஹரன், அந்த நூல் விற்பனையின் மூலம் 7 ஆயிரம் ரிங்கிட்டைத் திரட்டி, அந்த மொத்த தொகையையும் ஜோகூர், யயாசான் சுல்தான் இப்ராஹிம் அறவாரியத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

அவரின் இந்தப் பங்களிப்பு மலேசிய சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

கல்விப் புரட்சியின் நாயகன்: அன்வாரின் தொலைநோக்கும் நாளைய மலேசியாவும்

கல்விப் புரட்சியின் நாயகன்: அன்வாரின் தொலைநோக்கும் நாளைய மலேசியாவும்

தேவஸ்தானத்திற்கு பழைய சட்டமே முக்கியம் என்றால், கோலாலம்பூரில் எத்தனை மாட்டு வண்டிகள் ஓடுகின்றன?

தேவஸ்தானத்திற்கு பழைய சட்டமே முக்கியம் என்றால், கோலாலம்பூரில் எத்தனை மாட்டு வண்டிகள் ஓடுகின்றன?

தடம் மாறும் அம்னோ - பாரம்பரியப் பெருமையா அல்லது இனவாத அரசியலா?

தடம் மாறும் அம்னோ - பாரம்பரியப் பெருமையா அல்லது இனவாத அரசியலா?

தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கைச் சரிவு: கவலை தரும் புள்ளி விவரங்களும் கண்டறியப்பட வேண்டிய உண்மைகளும்

தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கைச் சரிவு: கவலை தரும் புள்ளி விவரங்களும் கண்டறியப்பட வேண்டிய உண்மைகளும்

சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் விழா: மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி பங்கேற்பு

சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் விழா: மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி பங்கேற்பு

சென்னை உலகத் தமிழர் திருநாள் மாநாடு: தமிழக முதல்வர் கைகளால் பினாங்கு மாநில அரசுக்கு உயரிய அங்கீகாரம்

சென்னை உலகத் தமிழர் திருநாள் மாநாடு: தமிழக முதல்வர் கைகளால் பினாங்கு மாநில அரசுக்கு உயரிய அங்கீகாரம்