Jun 23, 2026
Thisaigal NewsYouTube
இளம் எழுத்தாளர் கிரிஷ் ஹரன் நாயருக்கு சிறப்பு விருது
சிறப்பு செய்திகள்

இளம் எழுத்தாளர் கிரிஷ் ஹரன் நாயருக்கு சிறப்பு விருது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.24-

இளம் எழுத்தாளரான கிரிஷ் ஹரன் நாயருக்குச் சிறப்பு விருது வழங்கப்பட்டு, கெளரவிக்கப்பட்டுள்ளது. நேற்று கோலாலம்பூர், ஸ்டெடியம் மெர்டேக்கா அரங்கில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான சிறுவர்கள் தினத்தையொட்டி கிரிஷ் ஹரன் நாயருக்கு இந்தச் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ நொராய்னியுடன் இணைந்து பிரதமரின் துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், இந்தச் சிறப்பு விருதை கிரிஷ் ஹரனுக்கு வழங்கினார்.

எழுத்துத்துறையில் சமூக நல பங்களிப்புக்காக அவருக்கு இந்தச் சிறப்பு விருது, மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

The Mysterious War To The Deep எனும் நூலை எழுதியது மூலம் மக்களின் கவன ஈர்ப்பைப் பெற்ற கிரிஷ் ஹரன், அந்த நூல் விற்பனையின் மூலம் 7 ஆயிரம் ரிங்கிட்டைத் திரட்டி, அந்த மொத்த தொகையையும் ஜோகூர், யயாசான் சுல்தான் இப்ராஹிம் அறவாரியத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

அவரின் இந்தப் பங்களிப்பு மலேசிய சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!