Apr 27, 2026
Thisaigal NewsYouTube
இளம் எழுத்தாளர் கிரிஷ் ஹரன் நாயருக்கு சிறப்பு விருது
சிறப்பு செய்திகள்

இளம் எழுத்தாளர் கிரிஷ் ஹரன் நாயருக்கு சிறப்பு விருது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.24-

இளம் எழுத்தாளரான கிரிஷ் ஹரன் நாயருக்குச் சிறப்பு விருது வழங்கப்பட்டு, கெளரவிக்கப்பட்டுள்ளது. நேற்று கோலாலம்பூர், ஸ்டெடியம் மெர்டேக்கா அரங்கில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான சிறுவர்கள் தினத்தையொட்டி கிரிஷ் ஹரன் நாயருக்கு இந்தச் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ நொராய்னியுடன் இணைந்து பிரதமரின் துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், இந்தச் சிறப்பு விருதை கிரிஷ் ஹரனுக்கு வழங்கினார்.

எழுத்துத்துறையில் சமூக நல பங்களிப்புக்காக அவருக்கு இந்தச் சிறப்பு விருது, மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

The Mysterious War To The Deep எனும் நூலை எழுதியது மூலம் மக்களின் கவன ஈர்ப்பைப் பெற்ற கிரிஷ் ஹரன், அந்த நூல் விற்பனையின் மூலம் 7 ஆயிரம் ரிங்கிட்டைத் திரட்டி, அந்த மொத்த தொகையையும் ஜோகூர், யயாசான் சுல்தான் இப்ராஹிம் அறவாரியத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

அவரின் இந்தப் பங்களிப்பு மலேசிய சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு