Jan 21, 2026
Thisaigal NewsYouTube
பேரா மஇகா கல்வி நிதியுதவியாக 3 அல்லது 4 இலட்சம் ரிங்கிட்டை ஒவ்வொரு மாதமும் வழங்கி வருகிறது
சிறப்பு செய்திகள்

பேரா மஇகா கல்வி நிதியுதவியாக 3 அல்லது 4 இலட்சம் ரிங்கிட்டை ஒவ்வொரு மாதமும் வழங்கி வருகிறது

Share:

ஈப்போ, டிசம்பர்.05-

பேரா மாநில மஇகா கல்வியின் முக்கியதுவத்தை அறிந்து உயர்க்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 3 அல்லது 4 லட்சம் ரிங்கிட்டைக் கல்வி நிதி உதவியாக உயர்க்கல்வி மாணவர்களுக்கு வழங்கி வருகிறது என்று பேரா மஇகா தொடர்புக்குழுத் தலைவரும், தேசிய உதவித் தலைவருமான டான் ஶ்ரீ எம். இராமசாமி கூறினார்.

இம்மாதம் 7 மாணவர்களுக்கு சுமார் 2 இலட்சம் ரிங்கிட் கல்வி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. இந்திய மாணவர்களைத் தவிர்த்து பிற இன மாணவர்களுக்கும் மஇகா பாகுபாடின்றி உதவி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பேரா மாநில மஇகாவின் கல்வி நிதி உதவியைப் பெற்ற மாணவி ஏஞ்சலின் கூறுகையில், தாதியர் துறையில் மூன்று வருட டிப்ளோமா படிப்பை மேற்கொள்வதற்கு இந்த நிதி உதவி தமக்குப் பேருதவியாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகங்களில் உயர்க்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவுவதுடன், திவெட் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மஇகா-வால் உருவான " டேப்" கல்லூரியில் இதுவரை சுமார் 47 ஆயிரம் மாணவர்கள் படித்து நன்மை அடைந்துள்ளதை டான் ஶ்ரீ இராமசாமி சுட்டிக் காட்டினார்.

Related News

கல்விப் புரட்சியின் நாயகன்: அன்வாரின் தொலைநோக்கும் நாளைய மலேசியாவும்

கல்விப் புரட்சியின் நாயகன்: அன்வாரின் தொலைநோக்கும் நாளைய மலேசியாவும்

தேவஸ்தானத்திற்கு பழைய சட்டமே முக்கியம் என்றால், கோலாலம்பூரில் எத்தனை மாட்டு வண்டிகள் ஓடுகின்றன?

தேவஸ்தானத்திற்கு பழைய சட்டமே முக்கியம் என்றால், கோலாலம்பூரில் எத்தனை மாட்டு வண்டிகள் ஓடுகின்றன?

தடம் மாறும் அம்னோ - பாரம்பரியப் பெருமையா அல்லது இனவாத அரசியலா?

தடம் மாறும் அம்னோ - பாரம்பரியப் பெருமையா அல்லது இனவாத அரசியலா?

தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கைச் சரிவு: கவலை தரும் புள்ளி விவரங்களும் கண்டறியப்பட வேண்டிய உண்மைகளும்

தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கைச் சரிவு: கவலை தரும் புள்ளி விவரங்களும் கண்டறியப்பட வேண்டிய உண்மைகளும்

சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் விழா: மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி பங்கேற்பு

சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் விழா: மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி பங்கேற்பு

சென்னை உலகத் தமிழர் திருநாள் மாநாடு: தமிழக முதல்வர் கைகளால் பினாங்கு மாநில அரசுக்கு உயரிய அங்கீகாரம்

சென்னை உலகத் தமிழர் திருநாள் மாநாடு: தமிழக முதல்வர் கைகளால் பினாங்கு மாநில அரசுக்கு உயரிய அங்கீகாரம்