Jan 13, 2026
Thisaigal NewsYouTube
பேரா மஇகா கல்வி நிதியுதவியாக 3 அல்லது 4 இலட்சம் ரிங்கிட்டை ஒவ்வொரு மாதமும் வழங்கி வருகிறது
சிறப்பு செய்திகள்

பேரா மஇகா கல்வி நிதியுதவியாக 3 அல்லது 4 இலட்சம் ரிங்கிட்டை ஒவ்வொரு மாதமும் வழங்கி வருகிறது

Share:

ஈப்போ, டிசம்பர்.05-

பேரா மாநில மஇகா கல்வியின் முக்கியதுவத்தை அறிந்து உயர்க்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 3 அல்லது 4 லட்சம் ரிங்கிட்டைக் கல்வி நிதி உதவியாக உயர்க்கல்வி மாணவர்களுக்கு வழங்கி வருகிறது என்று பேரா மஇகா தொடர்புக்குழுத் தலைவரும், தேசிய உதவித் தலைவருமான டான் ஶ்ரீ எம். இராமசாமி கூறினார்.

இம்மாதம் 7 மாணவர்களுக்கு சுமார் 2 இலட்சம் ரிங்கிட் கல்வி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. இந்திய மாணவர்களைத் தவிர்த்து பிற இன மாணவர்களுக்கும் மஇகா பாகுபாடின்றி உதவி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பேரா மாநில மஇகாவின் கல்வி நிதி உதவியைப் பெற்ற மாணவி ஏஞ்சலின் கூறுகையில், தாதியர் துறையில் மூன்று வருட டிப்ளோமா படிப்பை மேற்கொள்வதற்கு இந்த நிதி உதவி தமக்குப் பேருதவியாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகங்களில் உயர்க்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவுவதுடன், திவெட் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மஇகா-வால் உருவான " டேப்" கல்லூரியில் இதுவரை சுமார் 47 ஆயிரம் மாணவர்கள் படித்து நன்மை அடைந்துள்ளதை டான் ஶ்ரீ இராமசாமி சுட்டிக் காட்டினார்.

Related News

மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம்: கோத்தா கெமுனிங் மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் நிதி உதவி

மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம்: கோத்தா கெமுனிங் மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் நிதி உதவி

கடல் கடந்தும் ஒலிக்கும் தமிழ்க்குரல்: சென்னையில் 'அயலகத் தமிழர் திருவிழா 2026' கோலாகலத் தொடக்கம் - உதயநிதி ஸ்டாலின் அதிரடி முழக்கம்

கடல் கடந்தும் ஒலிக்கும் தமிழ்க்குரல்: சென்னையில் 'அயலகத் தமிழர் திருவிழா 2026' கோலாகலத் தொடக்கம் - உதயநிதி ஸ்டாலின் அதிரடி முழக்கம்

100 ஆண்டு காலப் பழையச் சட்டத்தைப் பிடித்துக் கொண்டு அழாதீர்கள் -  தேவஸ்தானத்திற்குப் பாப்பாராய்டு கடும் எச்சரிக்கை!

100 ஆண்டு காலப் பழையச் சட்டத்தைப் பிடித்துக் கொண்டு அழாதீர்கள் - தேவஸ்தானத்திற்குப் பாப்பாராய்டு கடும் எச்சரிக்கை!

பொங்கலுடன் திருவள்ளுவர் ஆண்டு துவக்கமும் முன்னெடுக்கப்படுகிறது

பொங்கலுடன் திருவள்ளுவர் ஆண்டு துவக்கமும் முன்னெடுக்கப்படுகிறது

உள்நாட்டுத் தொழிலாளர்களைக் கவர ஓய்வூதியத் திட்டம் – தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

உள்நாட்டுத் தொழிலாளர்களைக் கவர ஓய்வூதியத் திட்டம் – தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

2026-இல் மலேசியர்களுக்காகக் காத்திருப்பது என்ன?

2026-இல் மலேசியர்களுக்காகக் காத்திருப்பது என்ன?