Jun 24, 2026
Thisaigal NewsYouTube
பேரா மஇகா கல்வி நிதியுதவியாக 3 அல்லது 4 இலட்சம் ரிங்கிட்டை ஒவ்வொரு மாதமும் வழங்கி வருகிறது
சிறப்பு செய்திகள்

பேரா மஇகா கல்வி நிதியுதவியாக 3 அல்லது 4 இலட்சம் ரிங்கிட்டை ஒவ்வொரு மாதமும் வழங்கி வருகிறது

Share:

ஈப்போ, டிசம்பர்.05-

பேரா மாநில மஇகா கல்வியின் முக்கியதுவத்தை அறிந்து உயர்க்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 3 அல்லது 4 லட்சம் ரிங்கிட்டைக் கல்வி நிதி உதவியாக உயர்க்கல்வி மாணவர்களுக்கு வழங்கி வருகிறது என்று பேரா மஇகா தொடர்புக்குழுத் தலைவரும், தேசிய உதவித் தலைவருமான டான் ஶ்ரீ எம். இராமசாமி கூறினார்.

இம்மாதம் 7 மாணவர்களுக்கு சுமார் 2 இலட்சம் ரிங்கிட் கல்வி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. இந்திய மாணவர்களைத் தவிர்த்து பிற இன மாணவர்களுக்கும் மஇகா பாகுபாடின்றி உதவி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பேரா மாநில மஇகாவின் கல்வி நிதி உதவியைப் பெற்ற மாணவி ஏஞ்சலின் கூறுகையில், தாதியர் துறையில் மூன்று வருட டிப்ளோமா படிப்பை மேற்கொள்வதற்கு இந்த நிதி உதவி தமக்குப் பேருதவியாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகங்களில் உயர்க்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவுவதுடன், திவெட் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மஇகா-வால் உருவான " டேப்" கல்லூரியில் இதுவரை சுமார் 47 ஆயிரம் மாணவர்கள் படித்து நன்மை அடைந்துள்ளதை டான் ஶ்ரீ இராமசாமி சுட்டிக் காட்டினார்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!