Oct 16, 2025
Thisaigal NewsYouTube
ஆதரவற்ற இல்லத்தைச் சேர்ந்த 35 குழந்தைகளுக்கு புத்தாடைகளை எடுத்து வழங்கினார் பிரகாஷ்
சிறப்பு செய்திகள்

ஆதரவற்ற இல்லத்தைச் சேர்ந்த 35 குழந்தைகளுக்கு புத்தாடைகளை எடுத்து வழங்கினார் பிரகாஷ்

Share:

கிள்ளான், அக்டோபர்.13-

வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஆதரவற்ற இல்லத்தைச் சேர்ந்த 35 குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புலிங்கம், கிள்ளான் லிட்டல் இந்தியாவில் உள்ள பிரபல ஜவுளிக் கடை ஒன்றிலிருந்து புத்தாடைகளை வாங்கி, அச்சிறார்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

தீபாவளித் திருநாளை நாம் அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்கும் அதே வேளையில் நம்மைப் போல் ஆதரவற்ற இல்லங்களைச் சேர்ந்த சிறார்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கும் புத்தாடைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக பிரகாஷ் தெரிவித்தார்.

அது மட்டுமின்றி சிறார்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் ஷா ஆலாம் நட்சத்திர விடுதியில் அவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டதுடன் அவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பாக பணமுடிப்பையும் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் வழங்கினார்.

Related News

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

இராமகிருஷ்ண ஆசிரம பிள்ளைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கினார் ஆர்எஸ்என் ராயர்

இராமகிருஷ்ண ஆசிரம பிள்ளைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கினார் ஆர்எஸ்என் ராயர்